Skip to main content

''சபாநாயகரே முடிவெடுப்பார்...'' 11 எம்எல்ஏக்கள் வழக்கு முடித்துவைப்பு!! 

Published on 14/02/2020 | Edited on 14/02/2020

தமிழக துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க கோரும் வழக்கை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது. திமுக கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரித்தது.
 

 '' Speaker Decides ... '' 11 MLAs Case Finalized !!

 

11 எம்எல்ஏக்கள் வழக்கில் சபாநாயகரின் செயலாளர் விளக்கம் தர உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி பாஃப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு 'இதில் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் உரிய முடிவை எடுப்பார் என நம்புகிறோம் ஆனால் காலக்கெடு எதுவும் கொடுக்கமுடியாது' என தெரிவித்து இந்த வழக்கை முடித்து வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்