Skip to main content

ஒருவர் கூட தேர்ச்சி பெறாத நீதிபதி தேர்வு

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு நடந்த முதல் நிலை தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்நிலைத் தேர்வில் பங்கேற்ற 3,562 பேரில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாததால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

31 மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கு ஏப்ரல் ஏழாம் தேதி முதல் நிலை தேர்வு நடைபெற்றது. ஏப்ரல் 7 இல் நடந்த  தேர்வில் சிவில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என 3,562 பேர் பங்கேற்றனர். மாவட்ட நீதிபதிகள் பணியிடங்களுக்கான பிரதான தேர்வு மே 25 மற்றும் 26ம் தேதிகளில் நடைபெறுகிறது.

 

cbc

 

முதல்நிலைத் தேர்வில் பொது பிரிவினர் 60 மதிப்பெண்களும், பழங்குடியினர் 45 மதிப்பெண்களும் பெற  வேண்டும் பிற்படுத்த மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 52.5 மதிப்பெண்கள் பெற வேண்டும். 

 

குறிப்பிட்ட மதிப்பெண் பெறாதவர்கள் பிரதான தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கேள்விகள் மிகவும் கடினமாகவும் மைனஸ் மதிப்பெண் வழங்கப்பட்டதால் ஒருவர்கூட தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்