Skip to main content

“சார் ஊர்ல இல்ல... யாரும் வெயிட் பண்ண வேண்டாம்” - கலங்கிய ரசிகர்கள்

Published on 12/12/2022 | Edited on 12/12/2022

 

 "Sir is not in town...don't wait for him to come"-concerned fans

 

நடிகர் ரஜினிகாந்தின் 72 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் காரணமாக அவரது ரசிகர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டு வாசலில் நள்ளிரவு 12 மணிக்கு கூடிய ரசிகர்கள் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோல் பல்வேறு இடங்களிலும் ரஜினி ரசிகர்கள் அவரது பிறந்தநாளைக் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில், ரஜினிகாந்த் குடியிருக்கும் சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் அவரது ரசிகர்கள் குவிந்தனர். வழக்கம்போல் ரஜினிகாந்த் வெளியே வந்து நன்றி சொல்வார் என எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என ஆராவாரத்தோடு காத்திருந்தனர். வெளியே வந்த ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம், “சார் ஊரில் இல்லை. அவர் சார்பாக நான் எல்லாருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன், வந்ததற்கு. அவர் ஊரில் இருந்தால் கண்டிப்பாக வந்து இருப்பாங்க. யாரும் மழையில் வெயிட் பண்ண வேண்டாம். எல்லாருக்கும் நன்றி” என்று சொல்லிவிட்டு கிளம்பினார்.

 

இதனையறிந்த ரசிகர்கள் சிலர் கண்ணீர் விட்டு அழுதனர். குறிப்பாக பெண்மணி ஒருவர் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் வைரலாகி வருகிறது. இதற்கு முன்பே கடந்தாண்டு ரஜினிகாந்த் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது அவரது வீட்டின் அருகே காத்திருந்த பெண்மணி ஒருவர், 'ரஜினிகாந்த் சார் வெளிய வாங்க சார்... வெளிய வாங்க சார்..' என கண்ணீர் விட்டு கத்தியது வைரலாகி இருந்தது குறிப்பிடத்தகுந்தது.

 

 

சார்ந்த செய்திகள்