Skip to main content

'சிம் ஸ்வாப்...' சிம் கார்டு மூலம் வங்கி கணக்கில் கை வைக்கும் மற்றொரு நூதன திருட்டு!

Published on 04/01/2022 | Edited on 04/01/2022

 

'Sim Swap ...' Another innovative theft of a bank account with a cell phone!

 

ஏடிஎம் கொள்ளை, ஆன்லைன் மணி கொள்ளை என எத்தனையோ வகையான நூதன மோசடிகளைக் கேள்விப்பட்டிருப்போம். அப்படிபட்ட கொள்ளைகளில் இடம்பிடித்துள்ளது 'சிம் ஸ்வாப்' எனும் புதிய மோசடி கொள்ளை.

 

சென்னையில் இயங்கிவரும் தனியார் கண் மருத்துவமனை வங்கி கணக்கிலிருந்து 24 லட்சம் ரூபாய் அவர்களுக்கே தெரியாமல் காணாமல்போக, அதிர்ந்துபோன மருத்துவமனை நிர்வாகம் சம்பந்தப்பட்ட வங்கியை நாடியுள்ளது. ஆனால் வங்கி தரப்போ உரிய நடைமுறையைப் பின்பற்றி ஒடிபி எண்ணைக் கொடுத்துதான் பணம் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளது. உடனே மருத்துவமனை நிர்வாகம் போலீசில் புகாரளித்த நிலையில் சைபர் க்ரைம் போலீசார் விசாரணையைக் கையிலெடுத்தனர்.

 

தீவிர விசாரணைக்குப் பிறகு 'சிம் ஸ்வாப்' முறையில் பணம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 'சிம் ஸ்வாப்' அதாவது வங்கி கணக்கு வைத்திருக்கும் தனிநபர் அல்லது நிறுவனத்தின் வங்கி கணக்கின் தனிப்பட்ட தகவல்களைச் சேகரித்து அதன்மூலம் இந்த கொள்ளை அரங்கேற்றப்படுகிறது. ஃபோன் கால் மூலமோ அல்லது குறுஞ்செய்தி மூலமோ வங்கி கணக்கின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்படுகிறது. வங்கிகளில் பணியாற்றும் சில ஆசை பேர்வழிகள் ஒரு தனிப்பட்ட நபரின் தகவல்களைப் பிறருக்கு விற்க வாய்ப்புள்ளது எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இப்படி தனிப்பட்ட நபர் மற்றும் நிறுவனங்களின் வங்கி கணக்கின் தனிப்பட்ட தகவலை விற்பதற்காக ஒரு கள்ளச் சந்தையே இயங்கி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

'Sim Swap ...' Another innovative theft of a bank account with a cell phone!

 

இப்படி தனிப்பட்ட தகவலைப் பெறும் கும்பல் முதல் வேலையாக கையிலெடுப்பது செல்ஃபோன் எண்ணைதான். இது ஓபிடி காலம். எல்லா பரிவர்தனைகளுக்கும் ஒடிபியே கதி என்று ஆகிவிட்ட நிலையில் ஓபிடிபியை எப்படிச் சந்தேகம் இல்லாமல் எடுப்பது என்பதுதான் இந்த 'சிம் ஸ்வாப்' திருட்டு. முதலில் வங்கி கணக்குடன் தொடர்புடைய செல்ஃபோன் எண்ணை பெறும் திருட்டு கும்பல், தன்னுடைய செல்ஃபோன் எண் தொலைந்துவிட்டதாகச் சம்பந்தப்பட்ட செல்ஃபோன் நிறுவனத்திடம் பேசி அந்த எண்ணை முடக்குவார்கள். அதன்பிறகு பெறப்பட்ட மற்ற தனிப்பட்ட தகவல்களை வைத்து போலி ஆவணங்களைப் பெற்று மீண்டும் அதே எண்ணில் செல்ஃபோன் எண்ணை பெறுவார்கள். இதனால் வாடிக்கையாளரின் வங்கி கணக்கு பரிவர்த்தனைக்கான ஒடிபி நேரடியாக திருட்டு கும்பலின் கைகளுக்குப் போய் சேர்ந்துவிடும். இதன்மூலம் கணக்கில் உள்ள பணத்தை சில மணிநேரத்தில் எடுத்துவிடுவார்கள்.

 

'Sim Swap ...' Another innovative theft of a bank account with a cell phone!

 

போலீசார் நடத்திய விசாரணையில் புகார் செய்த அந்த தனியார் கண் மருத்துவமனையின் கணக்கிலிருந்து மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மூலமாக பணம் எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து மேற்கு வங்கம் சென்ற சென்னை சைபர் க்ரைம் போலீசார் மேற்கு வங்க போலீசாரின் உதவியுடன் அந்த ஏடிஎம்-ஐ கண்டுபிடித்தனர். அங்கு பதிவான சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் இருவரைக் கைது செய்து விசாரித்ததில் 'சிம் ஸ்வாப்' எனும் புதுவகை கொள்ளையைத் தமிழகத்திற்கு அறிமுகம் செய்த சயந்தன் முகர்ஜி, ராகுல்ராய், ராபன் அலிஷானா, ராகேஷ்குமார் சிங் என நான்கு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களைச் சென்னை அழைத்துவந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மக்களே உஷார்! அடுத்தடுத்து வரும் ஃபோன் கால் - மிரட்டும் கும்பல்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
 gang extorts money from people claiming to be involved in cannabis trafficking

சில ஆண்டுகளுக்கு முன்பு, நமது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடும் கொள்ளையர்கள், ஏதேனும் ஒரு வகையில் நமக்கு தொடர்பு கொண்டு சில விபரங்கள் கேட்பார்கள். அப்போது ஓடிபி எண் கூறினால் மட்டுமே நமது வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிபோகும். ஆனால் இப்போது பல வகைகளிலும் வங்கிக் கணக்கில் உள்ள பணம் பறிக்கப்பட்டு வருகிறது. ஒருவரின் ஆதார் எண்ணை வைத்து அவர் எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்துள்ளார். அவரது பான் கார்டு எண், செல்போன் எண், வங்கிக் கணக்கு எண், முகவரி உள்ளிட்ட பல விஷயங்களை மோசடியில் ஈடுபடுபவர்கள் சுலபமாக எடுத்து விடுகின்றனர். இதனைப் பயன்படுத்தி தொடர்ந்து மோசடி கும்பல் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறி ஓடிபி எண் வாங்கி மோசடியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான விழிப்புணர்வு ஏற்பட்டதும், இந்த முறையில் ஏமாற்ற முடியவில்லை. அதன் பிறகு குறிப்பிட்ட ஒரு லிங்க் அனுப்பி, அதனை டவுன்லோட் செய்தால் உங்களுக்கு பணம் வரும் அல்லது வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என மோசடி அறிவிப்புகளைக் கொடுத்து குறிப்பிட்ட அந்த லிங்கை தொடும்போது நமது பணம் பறிக்கப்பட்டு வந்தது. இவ்வாறு பல்வேறு வகைகளில் பொதுமக்களை ஏமாற்றி வந்த நபர்கள், தற்போது பொதுமக்களை மிரட்டி பணம் பறிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே போதைப்பொருள் சம்பந்தமான செய்திகள் அதிகளவில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. மேலும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சூழலை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட மர்ம கும்பல், தங்களைப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் என்றும், மும்பையில் உள்ள அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும் கூறி தற்போது மோசடியில் ஈடுபடத் தொடங்கியுள்ளனர்.

இதே பாணியில் கடந்த 4  நாட்களில் 2 சம்பவங்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளது. இதில், காரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த பாரதி என்ற பெண்ணை கடந்த சில  தினங்களுக்கு முன்பு, சில மர்ம நபர்கள் தொடர்பு கொண்டுள்ளனர். தொடர்பு கொண்டவர்கள் சிபிஐ அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், இந்த முகவரிக்கு போதைப்பொருள் பார்சல் வந்திருப்பதாகவும், உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட உள்ளது எனவும் கூறியுள்ளனர். இதனால், அதிர்ச்சியில் உறைந்த அந்தப் பெண்ணிடம், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யாமல் இருக்க தங்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பும்படி கூறியுள்ளனர். அதன்படி, அந்தப் பெண்ணும் 21,400 ரூபாயை உடனே அனுப்பியுள்ளார். இந்தியன் வங்கிக் கணக்கு மூலம் இந்த பரிவர்த்தனை நடந்துள்ளது. அதன் பிறகு பாதிக்கப்பட்ட பெண், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

அதேபோன்று இந்த சம்பவம் நடந்த மறுதினம், ஓட்டேரி நார்த் டவுன் பகுதியில் வசித்து வரும் ராம் திலக் என்ற காவலரின் மனைவி அனுஷாவிற்கும் இதே பாணியில் போன் வந்துள்ளது. அதில் பேசியவர்கள் உங்களின் ஆதார் எண்ணை வைத்து போதைப் பொருள் கடத்தப்பட்டுள்ளது எனக் கூறி, பல்வேறு கேள்விகளைக் கேட்டுள்ளனர். இப்படி, ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டு அதன் மூலம் அவரது வங்கிக் கணக்கு பற்றிய தகவல்களை அறிய முயன்றுள்ளனர். ஆனால் அனுஷா அதனைத் தவிர்த்து விட்டார். அதுமட்டுமல்லாமல், அவர்களிடம் பேசிய அனுஷா, என் மீது போதைப் பொருள் சம்பந்தமான வழக்கு உள்ளது என்றால் சென்னை கமிஷனர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு தெரிவியுங்கள். அவர்கள் எங்களை நேரில் அழைத்து விசாரிப்பார்கள் எனத் தைரியமாகக் கூறியுள்ளார்.

இதனால் சுதாரித்துக் கொண்ட வட மாநில கும்பல் தொடர்பைத் துண்டித்து விட்டனர். இதில் முழுக்க முழுக்க மோசடி கும்பல் ஆங்கிலத்தில் பேசியுள்ளனர். அதன் பிறகு அனுஷா நடந்தவற்றை தனது கணவர் ராம் திலக்கிடம் கூறியுள்ளார். இதனையடுத்து, புளியந்தோப்பு துணை கமிஷனர் ஈஸ்வரனிடம் நடந்தவற்றை கூறியுள்ளனர்‌. அவர்கள் கொடுத்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை வைத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயத்தில் இந்த நூதன மோசடி குறித்து விழிப்புணர்வும் செய்து வருகின்றனர்.

Next Story

நாமக்கல் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 06/03/2024 | Edited on 06/03/2024
CM MK Stalin fulfilled the demand of the people of Namakkal 

நாமக்கல் மாவட்டம் கடந்த 1997 ஆம் ஆண்டு 2 வருவாய் கோட்டங்கள், 8 வட்டங்கள், 30 வருவாய் பிர்க்காக்களுடன் (Firka) உருவாக்கப்பட்டது. கடந்த 2011 ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, நாமக்கல் மாவட்டத்தின் மக்கள் தொகையின் எண்ணிக்கை 17 லட்சத்து 26 ஆயிரத்து 601 ஆகும். நாமக்கல் மாவட்டத்தில் 169 தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள் உள்ளிட்ட பிற செயற்பதிவாளர்களின் கட்டுப்பாட்டில் இயங்கும் சங்கங்களையும் சேர்த்து மொத்தம் 816 சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில், நாமக்கல் மாவட்டம், கோழிப்பண்ணை, லாரி பாடி பில்டிங், முட்டை உற்பத்தி, ஆமணக்கு எண்ணெய் பதப்படுத்தும் தொழில் ஆகிய பல முக்கிய தொழில்களுக்கு பெயர் பெற்றதாகும். சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, சேலம் மாவட்டத்தில் 45 கிளைகள் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 29 கிளைகள் என மொத்தம் 74 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் 98.70 கோடி ரூபாய் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் 55.15 கோடி ரூபாய் பங்குத்தொகையுடன் இவ்வங்கி செயல்பட்டு வருகிறது. மேலும், 2020-21 ஆம் ஆண்டில் 22.17 கோடி ரூபாய், 2021-22 ஆம் ஆண்டில் 20.37 கோடி ரூபாய் மற்றும் 2022-23 ஆம் ஆண்டில் 18.24 கோடி ரூபாய் என தொடர்ந்து லாபம் ஈட்டியுள்ளது.

இத்தகைய சூழலில் சேலம் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியின் செயல்பாட்டு பகுதியில் உள்ள நாமக்கல் மாவட்டதிற்கென ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி உருவாக்கிட வேண்டும் என்பது இம்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். இதனைப் பரிசீலித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், நாமக்கல் மாவட்ட விவசாயிகளின் நலன் கருதியும் மற்றும் பல்வேறு தொழில் துறையினர் பயன்பெறும் வகையிலும் பல்வேறு சிறப்புகளைக் கொண்ட நாமக்கல் மாவட்டத்திற்கென பிரத்தியேகமாக ஒரு புதிய மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியை உருவாக்கிட முதலமைச்சர் ஆணையிட்டார். இந்நிலையில் இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் வகையில் நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உருவாக்கி இன்று (6.3.2024) அரசாணை வெளியிடப்பட்டுள்ளது எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.