Skip to main content

என் மகனை பார்த்து 27 வருடம் ஆகிறது: ஒவ்வொரு நாளும்...: எடப்பாடி, மோடிக்கு 72 வயது மூதாட்டி கடிதம்

Published on 14/09/2018 | Edited on 14/09/2018


 

edappadi palanisamy


27 ஆண்டுகளாக என்னை விட்டு பிரிந்த மகனை இது நாள்வரை நான் கண்டதில்லை. 72 வயதாகும் என்னை பராமரிக்கவாவது எனது மகனை என்னிடம் அளிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று சாந்தன் தாயார் மத்திய, மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சாந்தனை விடுவிக்குமாறு அவரின் தாய் மகேஷ்வரி இலங்கையில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். 
 

அந்த கடிதத்தில், 
 

எனது பெயர் தில்லையம்பலம் மகேஸ்வரி. இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் வசித்து வருகிறேன். என்னுடைய வயது 72 ஐக் கடக்கின்றது. என்னுடைய மகனான சாந்தன் அவர்கள் மதிப்பிற்குரிய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று கடந்த 27 ஆண்டுகள் கடந்த நிலையில் சிறையில் வாடுகின்றார்.

 

edappadi palanisamy


 

அவரது விடுதலைக்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தனது அதிகாரத்தை பயன்படுத்தி கருணை அடிப்படையில் விடுதலைக்கான முடிவை எடுத்திருந்தார். அவரது முடிவை பரிந்துரைத்ததற்கு எம் குடும்பம் என்றும் தங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. வெகு விரைவில் என் மகன் என்னிடம் கிடைக்க ஆவன செய்யும்படி தங்களிடம் மன்றாடிக் கேட்டுக்கொள்கிறேன். 
 

1991ம் ஆண்டு என்னை விட்டு பிரிந்த மகனை இது நாள்வரை நான் கண்டதில்லை. ஒவ்வொரு தடவையும் அவருக்கு தூக்கு தண்டனை என அறிவிக்கப்பட்ட போதும் நாமும் தூக்கு மேடைக்கு ஏறியிறங்கிக் கொண்டு தான் இருந்தோம்.ங கடந்த 2013ம் ஆண்டு அவர் தந்தையான தில்லையம்பலமும் மாரடைப்பால் இறந்துவிட்டார். எனது ஒற்றைக் கண் பார்வையும் தற்போது வலுவிழந்துவிட்டது.
 

27 ஆண்டுகள் அவருக்கு மட்டுமளிக்கப்பட்ட தண்டனையல்ல. எம் குடும்பமும் ஒவ்வொரு நாளும் நரகத்தில்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். தயவு செய்து என் இறுதிக் காலத்தில் என்னை பராமரிக்கவாவது எனது மகனை என்னிடம் அளிக்கும்படி மன்றாடி வேண்டி நிற்கிறேன் என கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.