Skip to main content

அறிவியல்பூர்வமான நேர்மையான விசாரணையாம்! -நிர்மலாதேவி வழக்கில் சிபிசிஐடி!

Published on 25/08/2018 | Edited on 25/08/2018
n

 

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரிப் பேராசிரியை நிர்மலாதேவி வழக்கை, சிபிசிஐடி விசாரணைக்குப் பதிலாக, பெண் டிஐஜி தலைமையிலான சிறப்பு புலனாய்வுக்குழு ஒன்றை அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என,  சென்னை உயர் நீதிமன்றத்தில மனு தாக்கல் செய்திருந்தார் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன். 


இது தொடர்பாக, தற்போது இந்த வழக்கை விசாரித்துவரும் சிபிசிஐடி கூடுதல் எஸ்.பி. லாவண்யா அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், நிர்மலாதேவி, முருகன், கருப்பாசாமி ஆகிய மூவரையும் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தோம். ஒப்புதல் வாக்குமூலமும் பெற்றிருக்கிறோம்.

 

சம்பந்தப்பட்ட மாணவிகளின் மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த மொபைல்களில் பதிவு செய்யப்பட்ட நிர்மலாதேவியின் பேச்சுக்களை சி.டி.க்களாக மாற்றி, 160 சாட்சிகளை விசாரித்து, வாக்குமூலங்கள் பதிவு செய்திருக்கிறோம். மேலும் மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துச்செல்ல முயற்சித்தது உண்மைதான் என்றும், முருகன் மற்றும் கருப்பசாமி ஆகிய இருவருக்காகவே மாணவிகளிடம் செல்போனில் பேசியதாகவும், நிர்மலாதேவி  ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கிறார். இம்மூவரின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தி, மெமரி கார்டு, சிம் கார்டு, லேப்டாப் உள்ளிட்ட 123 முக்கிய ஆதாரங்களை கைப்பற்றி உள்ளோம். தடயவியல் துறை ஆய்வுக்கும் அனுப்பி வைத்திருக்கிறோம். நிர்மலாதேவியின் குரல் மாதிரி சென்னை, தடயவியல் துறை அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டது. நீதிமன்றத்தில் வழக்கை நடத்திட சிறப்பு வழக்கறிஞர் ராமகிருஷ்ணனை நியமித்துள்ளோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழ்நாட்டில் புலன் விசாரணை நடத்துவதில் முதன்மை அமைப்பான சிபிசிஐடி, அறிவியல்பூர்வமாக, நேர்மையாக, வெளிப்படைத்தன்மையுடன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கின் விசாரணை விரைவில் முடிவுக்கு கொண்டுவரப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. 
தலைமை நீதிபதி அமர்வானது, பெண்கள் உரிமை தொடர்பான வழக்குகளை விசாரித்து வருவதால், இவ்வழக்கை தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கிறது  நீதியரசர் ஹுலுவாடி ஜி.ரமேஷ் தலைமையிலான அமர்வு. 


நிர்மலாதேவி, கருப்பசாமி, முருகன் ஆகிய மூவர் மட்டுமே குற்றவாளிகள் என்கிற ரீதியிலேயே,  சிபிசிஐடி போலீசார் இந்த வழக்கைக் கொண்டு செல்கின்றனர்.  மக்களும் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கு; உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Nirmala Devi case; The High Court barrage of questions

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்கும் வழக்கை பெண் டிஐஜி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் கணேசன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, நிதிபதி சத்திய நாராயண அமர்வில் இன்று (18.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் வாதிடுகையில், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்துள்ளனர். இந்த புகாரை மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் அமைத்துள்ள விசாக கமிட்டிக்கு அனுப்பி இருக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள், “பாதிக்கப்பட்ட மாணவிகள் கொடுத்த புகாரை 6 ஆண்டுகளாக விசாக கமிட்டிக்கு ஏன் அனுப்பவில்லை. நிர்மலா தேவி வழக்கில் கடந்த 6 ஆண்டுகளாக நடவடிக்கை எடுக்காதது ஏன். இது குறித்து ஜூன் 7 ஆம் தேதிக்குள் விளக்கம் அளிக்க வேண்டும்” என மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும், கல்லூரி நிர்வாகத்திற்கும் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

Next Story

ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி ஆஜர்!

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

ddd

 

 

ddd

 

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

இந்தநிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் நிர்மலா தேவி, பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஆஜரானார்கள். அப்போது, அடுத்த மாதம் 4 -ஆம் தேதி, வழக்கு விசாரணையை ஒத்திவைத்த நீதிபதி காஞ்சனா, அன்றைய தினம் மூன்று மாணவிகளிடம் சாட்சி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.