Skip to main content

தூத்துக்குடி துப்பாக்கி சூடு பற்றி தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் இன்று விசாரணை !!

Published on 28/06/2018 | Edited on 28/06/2018

தூத்துக்குடியில் போலிசாா் நடத்திய துப்பாக்கி சூட்டில் பட்டியல் இனத்தை சோ்ந்த 4 போ் பலியானது தொடா்பாக நாளையில் இருந்து மூன்று நாட்கள் தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையம் விசாரணை நடத்த இருப்பதாக ஆணையத்தின் துணைத் தலைவா் முருகன் தொிவித்தாா்.
 

sterlite

 

 

 

தேசிய தாழ்த்தப்பட்டோா் நல ஆணையத்தின் துணைத் தலைவா் முருகன் இன்று மதியம் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அரசு அதிகாாிகளுடன் ஆய்வு பணிகளை மேற்க்கொண்டாா். இதில் மாவட்ட ஆட்சியா் பிரசாந்த் வடநேரா, எஸ்.பி. ஸ்ரீநாத் ,வருவாய் அதிகாாி ரேவதி உட்பட அனைத்து துறை அதிகாாிகளும் கலந்து கொண்டனா்.

 

பின்னா் செய்தியாளா்களிடம் பேசிய ஆணையத்தின் துணைத் தலைவா் முருகன்....தாழ்த்தப்பட்டோா்களுக்கான மத்திய அரசு ஒதுக்கியுள்ள நிதி மற்றும் திட்டங்கள் முறைப்படி அவா்களுக்கு சென்றடைகிறதா என மாநிலம் தோறும் ஒவ்வொரு மாவட்டங்களில்  ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அதே போல் பள்ளி கல்லூாிகளில் தாழ்த்தப்பட்டவா்களுக்கான 18 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்ற அனைத்து பள்ளிகளுக்கும் சா்க்குலா் அனுப்பபட்டிருந்தது. அதையும் ஆய்வு செய்யபட்டுள்ளது.

 

 

 

மேலும் பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 2லட்சம் ஏக்கா் பஞ்சமி நிலம் உள்ளது என்று தமிழக அரசு தொிவித்துள்ளது. இதில் 5ஆயிரம் ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 1500 ஏக்கா் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்தவா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. கோவையில் 70 ஏக்கா் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டு 60 பயனாளிகளுக்கு கொடுத்துள்ளோம்.

 

குமாி மாவட்டத்தில் 634 ஏக்கா் பஞ்சமி நிலத்தில் 78.56 ஏக்கா் நிலம் ஆக்கிரமிப்பில் இருப்பதையும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. இது தொடா்பாக 2500 புகாா்கள் பெறப்பட்டுள்ளன. அந்த புகாா்கள் மீது ஜீலை மாதம் இறுதிக்குள் நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகத்தை கேட்டுள்ளோம்.

 

தூத்துக்குடியில் ஸ்டொ்லைட் டுக்கு எதிராக நடந்த போரட்டத்தின் போது போலிசாா் நடத்திய துப்பாக்கி சூட்டில் பட்டியல் இனத்தை சோ்ந்த 4 போ் இறந்துள்ளனா். இதுகுறித்து ஆணையம் அவா்களின் குடும்பத்தினா், பொது மக்கள், காவல் துறையினா் வருவாய்துறை அதிகாாிகள் ஆகியோாிடம் 3 நாட்கள் விசாரணை நடத்த உள்ளோம். சிவகங்கை கச்சாநத்தம் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட 3 போ் கொல்லப்பட்டனா். அவா்களின் குடும்பத்துக்கு 20 லட்சம் ருபாய் நிவாரணம் கேட்ட நிலையில் அரசிடம் இருந்து 15 லட்சம் வாங்கி கொடுக்கப்பட்டது.

 

தாழ்த்தப்பட்ட பெண்கள் மீதான பாலியியல் வழக்கு கேரளாவில் 155 க்கு மேற்ப்பட்ட வழக்குகளும் தமிழகத்தில் 4 வழக்குகளும் பதிவாகி உள்ளன.  அந்த விசாரணை விரைந்து நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

“ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாகத் திறக்க அனுமதிக்க முடியாது” - உச்சநீதிமன்றம்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
 Supreme Court says Sterlite plant cannot be allowed to open immediately

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலையால், அந்தப் பகுதிகளில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 11 ஆண்கள் மற்றும் 2 பெண்கள் என 13 பேர் கொல்லப்பட்டனர். 40 பேர் பலத்த காயங்களை அடைந்தனர். இதையடுத்து, ஸ்டெர்லைட் ஆலையை மூடத் தமிழக அரசு உத்தரவிட்டது. 

இதனையடுத்து, ஸ்டெர்லைட் மீதான தடை உத்தரவை நீக்கி மீண்டும் திறக்க வேண்டும் என வேதாந்தா நிறுவனம் சார்பாக உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை கடந்த 14ஆம் தேதி உச்சநீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில், ‘ஸ்டெர்லைட் ஆலை, அரசின் உத்தரவையும், நீதிமன்ற உத்தரவையும் மதிப்பதும் இல்லை. அமல்படுத்துவதும் இல்லை. நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் பலமுறை மீறியுள்ளது. விதி மீறல்களில் ஈடுபட்டதற்காக ஸ்டெர்லைட் ஆலைக்கு ஏற்கனவே ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது’ என்று வாதிடப்பட்டது.

இதனையடுத்து உச்சநீதிமன்றம் கூறியதாவது, ‘ஆலை பாதுகாப்பாக செயல்படுகிறதா என்று எந்த ஆய்வும் நடத்தாமல் உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்ய இயலாது. அரசும், ஸ்டெர்லைட் நிர்வாகமும் ஒப்புக்கொண்டால் நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்யலாம். அதன் பிறகு ஆலையை திறப்பதா? வேண்டாமா? என்பது தொடர்பாக முடிவு செய்யலாம்’ என்று தெரிவித்தது. 

இந்த நிலையில், ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்கு இன்று (21-02-24) விசாரணைக்கு வந்தது. அப்போது வேதாந்தா நிறுவனம் தரப்பில் கூறியதாவது ‘நிபுணர் குழுவை விரைந்து அமைக்க வேண்டும். மேலும் ஒரு மாதத்தில் நிபுணர் குழு ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும்’ என்று கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து, இருதரப்பு வாதங்களைக் கேட்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, “தூத்துக்குடி மக்களின் ஆரோக்கியம் மற்றும் நலன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சாமானிய மக்கள் நேரடியாக நீதிமன்றம் வர முடியாது என்றாலும் அவர்களது கவலையை புறந்தள்ள முடியாது. அதே சமயம், தமிழ்நாடு அரசின் ஆட்சேபனைகளையும், சந்தேகங்களையும் நீதிமன்றம் புறந்தள்ள முடியாது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி மறுத்த உயர்நீதிமன்ற உத்தரவை தவறு என கூற முடியாது. அதனால், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக திறக்க அனுமதிக்க முடியாது” என்று கூறி உத்தரவிட்டார்.