Skip to main content

"அவங்கெல்லாம் நம்ப கண்ணுக்கு முதலமைச்சர் வேட்பாளராக தெரியமாட்டார்கள்"- சத்யராஜ்

Published on 03/05/2018 | Edited on 03/05/2018
sathyaraj

 

தென்னிந்திய திரையுலக பெண்கள் சங்கத்தின் தொடக்க விழாவில் நடிகர் சத்யராஜ் பேசியது, "மே தின நல்வாழ்த்துக்கள். பெண்களுக்கு வீட்டிலும் பிரச்சனை வெளியிலும் பிரச்சனை இருக்கிறது. முதலில் ஒரு முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்றால், அது எப்படி போடப்பட்டது என்று பார்க்க வேண்டும். சாஸ்திரம், பண்பாடு, கலாச்சாரம், நாகரிகம் இந்த அனைத்து பெயர்களாலும் பெண்கள் அடிமைப்படுத்தப்படுகின்றனர். இது அனைத்தும் கண்ணுக்கு தெரியாமல் இருக்கிறது. இதற்கு காவலாகத்தான் ஜாதி, மதம், கடவுள் என்கிற கற்பனை கருத்தியலையெல்லாம் வைத்திருக்கிறார்கள். இதிலிருந்து பெண்கள் விடுதலையாக வேண்டும் என்றால் பெண்கள் முதலில் படிக்க வேண்டிய புத்தகம் பெரியார் எழுதிய பெண் ஏன் அடிமையானால்? இதைத் தெரிந்துகொண்டால்தான் நாம் இதிலிருந்து வெளியே வர முடியும். பாலபாரதியை போன்று எல்லா அரசியல்வாதிகளும் இருந்துவிட்டால் எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள். அவங்கெல்லாம் நம்ப கண்ணுக்கு முதலமைச்சர் வேட்பாளராக  தெரியமாட்டார்கள்.

 

நமக்கு நல்லகண்ணு ஐயாவையே தெரியல. என்ன செய்றது அப்படி நாம் வளர்த்து வைத்திருக்கிறோம். மம்மூட்டி சார் சொன்னாரே நாங்க சிஎம்ம சினிமா திரையரங்குகளில் தேடுவதில்லை. சரி, வண்டி எங்கையோ போகுது. அண்ணல் அம்பேத்காருடைய வளர்ச்சியை பற்றி நான் இங்கு சொல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அவர் மிகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். அதனால், அவர்களுக்காக போராட வேண்டும் என்று நினைத்தவர். நல்ல படிப்பை படித்தார், பொருளாதாரத்தில் சிறந்து விளங்கினார். அதன் பின்தான் போராடினார், பெயர் வாங்கினார். இங்கு இருப்பவர்களுக்கும் அதைத்தான் நான் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன். கல்வியில், பொருளாதாரத்தில், பொது அறிவில் நன்கு வளர்த்துக்கொள்ளுங்கள் அதன் பின்பு போராடலாம். இந்த சங்கம் பெண்களின் எல்லா பிரச்சனைகளுக்கும் பக்கபலமாக இருக்க வேண்டும்". 

சார்ந்த செய்திகள்

Next Story

கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரம்; 3 வயது சிறுமிக்கு தாயால் நேர்ந்த துயரம்

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
The cruelty is unbearable to hear; Mother's tragedy of 3-year-old girl

பெண்களுக்கு எதிரான அதுவும் பெண் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கேட்கவே மனம் ஒவ்வாத கொடூரச் செயல் ஒன்று தூத்துக்குடியில் அரங்கேறி உள்ளது. பெற்ற தாயே தன்னுடைய 3 மகளை ஆபாசமாக புகைப்படம், வீடியோ எடுத்து ஆண் நண்பருக்கு அனுப்பி வைத்த கொடூர சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தை சேர்ந்த நபர் ஒருவர் தன்னுடைய மனைவி மற்றும் 3 வயது மக்களை விட்டுவிட்டு வெளிநாட்டிற்கு வேலைக்கு சென்றுள்ளார். மனைவியும் மகளும் தூத்துக்குடி ஏரல் புதுமனை தெருவில் வசித்து வந்துள்ளனர். அதே ஏரல் புதுமனை தெருவில் உதயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். உதயகுமார் மொபைல் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உதயக்குமாருக்கும் அந்த பெண்ணுக்கும் முறையற்ற தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அந்த பெண் அவருடைய வீட்டில் எடுத்த வீடியோக்களை செல்போன் கடை வைத்திருக்கும் உதயகுமாருக்கு அனுப்பி வைத்துள்ளார். அதில் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையின் ஆடை இல்லாமல் இருக்கும் வீடியோவையும் அனுப்பி வைத்துள்ளார். அந்த வீடியோவை பார்த்த கொடூரன் உதயகுமார் இணையத்தில் அப்லோட் செய்ததாக கூறப்படுகிறது.

வெளிநாட்டில் வேலை செய்து வரும் பெண்ணின் கணவருக்கு நண்பர்கள் சிலர் மூலம் இந்த தகவல் சென்றுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பெண்ணின் கணவர் உதயகுமார் மீதும் மனைவி மீது ஸ்ரீவைகுண்டம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உதயகுமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தியதில் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. இந்த நிலையில் உதயகுமாரும், அவருடன் முறையற்ற தொடர்பில் இருந்த பெண்ணும், போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 

Next Story

“அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்!”- ரஜினிகாந்த்

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Rajinikanth has said that he will not answer political questions

வேட்டையன் படப்பிடிப்பிற்காக சென்னையிலிருந்து ஹைதராபாத் சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்துவிட்டு சென்னை திரும்பினார்.ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவரும் திரைப்படமான வேட்டையன் படப்பிடிப்பு, ஹைதராபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடந்து வருகிறது.

அடுத்தகட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள, சென்னையிலிருந்து விமானம் மூலம் கடந்த 9ஆம் தேதி ஹைதராபாத் புறப்பட்டார். 75 சதவீத படப்பிடிப்பு நிறைவுற்ற நிலையில், அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பினார்.

“படப்பிடிப்பு நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது..” என்று மீடியாக்களிடம் ரஜினிகாந்த் தெரிவித்தபோது, நாடாளுமன்றத் தேர்தல் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு  “அரசியல் கேள்விக்கெல்லாம் பதில் சொல்லமாட்டேன்..” என்று கூலாகச் சொல்லிவிட்டு கிளம்பினார்.