Skip to main content

சேலம்: குறட்டை விட்டு தூங்கிய வார்டன் அதிரடி சஸ்பெண்ட்! 

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
ச்


சேலம் மத்திய சிறையில் தண்டனை மற்றும் விசாரணைக் கைதிகள் என 800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர். கொடுங்குற்றவாளிகள் அடைக்கப்படும் சிறைக்கூடமாக சேலம் மத்திய சிறை கருதப்பட்டு வருகிறது. அதனாலேயே இந்த சிறையை, கருப்பு குல்லா சிறை என்று ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்து அழை க்கப்பட்டு வருகிறது.


ஆனால், கடந்த சில ஆண்டுகளாகவே சிறைக்குள் கஞ்சா, புகையிலை, செல்போன் உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் கைதிகளிடம் தாராளமாக புழங்கி வருகின்றன. வார்டன்கள் மூலமாக கைதிகளுக்கு செல்போன் பரிமாற்றம் செய்யப்படுவதாக வந்த புகார்கள் குறித்தும் சிறைத்துறை நிர்வாகம் தீவிரமாக கண்காணித்து வருகிறது.


இதனால் ஒரே வார்டனை குறிப்பிட்ட பிரிவில் நீண்ட காலத்திற்கு பணியாற்றாமல், சுழற்சி முறையில் வெவ்வேறு பிரிவுகளுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். எந்த நேரமும் விழிப்புடன் இருக்கவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.


இந்நிலையில், சிறை எஸ்பி தமிழ்ச்செல்வன், நேற்று இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வார்டன் வினோத் எஸ்பி வருவதைக்கூட அறியாமல், நன்றாக குறட்டை விட்டு தூங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாக காவலர் வினோத்தை அந்த இடத்திலேயே சஸ்பெண்ட் செய்து எஸ்பி தமிழ்ச்செல்வன் உத்தரவிட்டார்.


இந்த சம்பவத்தால் சிறைக்காவலர்கள் மத்தியில் பரபரப்பும், கலக்கமும் ஏற்பட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலத்தில் சிறைக் கைதி திடீர் மரணம்; மாஜிஸ்ட்ரேட் விசாரணை!

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

SALEM CENTRAL PRISON MAGISTRATE INVESTIGATION


சேலம் சங்கர் நகரைச் சேர்ந்தவர் சீரங்கன். இவருடைய மகன் செல்வம் (42). கடந்த 2011- ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் அழகாபுரம் காவல்துறையினர் செல்வத்தைக் கைது செய்தனர். இந்த வழக்கில் அவருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்ததை அடுத்து, கடந்த 2017, மே 14- ஆம் தேதி முதல் அவர் சேலம் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டார்.
 


இந்நிலையில் செல்வம், திடீரென்று தனக்கு நெஞ்சு வலிப்பதாக வெள்ளிக்கிழமை (மே 22- ஆம் தேதி) காலையில் கூறினார். சிறைக்காவலர்கள் அவரை உடனடியாகச் சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கே முதல்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். 

அங்கு கைதிகளுக்கான ஸ்ட்ராங் அறையில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். ஆயுள் தண்டனை கைதி திடீரென்று இறந்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.

 

 

Next Story

பாளை ஜெயிலில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் சேலம் சிறைக்கு மாற்றம்!

Published on 19/02/2020 | Edited on 19/02/2020

கடந்த ஜன 08ம் தேதியன்று குமரி மாவட்டம் களியக்காவிளையின் கேரள பார்டர் செக் போஸ்ட் பணியிலிருந்த எஸ்.ஐ.வில்சன் இரவுப் பணியின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
 

தமிழக முழுக்க அதிர்வலையை ஏற்படுத்தி இந்தக் கொலையில் ஈடுபட்ட அப்துல் சமீம் மற்றும் தவுபீக் இரண்டு  தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இந்த கொலை தொடர்பாக சுமார் 15 பேர்கள் வரையிலான ஸ்லீப்பிங் ஸெல்களும் சிக்கினர். இவர்கள் இந்தக் கும்பலுக்கு அடைக்கலம் கொடுத்ததுடன் பலவகையிலும் உதவியவர்கள்.

kanyakumari wilson si incident case salem prison

பிடிபட்ட தீவிரவாதிகள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி கேரளாவின் எர்ணாகுளம் பேருந்து நிலைய கழிவு ஒடையிலும், கத்தி திருவனந்தபுரம் தம்பானூர் பகுதியிலிருந்தும் மீட்கப்பட்டு சுமார் ஒரு வார போலீஸ் கஸ்டடி விசாரணைக்குப் பின்பு நெல்லையின் பாளை சிறையில் அடைக்கப்பட்டனர்.
 

இரண்டு வாரங்களுக்குப் பிறகு மேலே இருந்து வந்த தகவலின் அடிப்படையில் அப்துல் சமீம், தவுபீக் இருவரையும் பாளை சிறையிலிருந்து உயர் பாதுகாப்பு பிரிவிலிருக்கும் சேலம் மத்திய சிறைக்கு மாற்றும் பணிகள் நடைபெற்றன. அதன்படி இரண்டு நாட்களுக்கு முன்பு பாளை சிறையிலிருந்த இரண்டு தீவிரவாதிகளையும் சேலம் சிறைக்கு மாற்றம் செய்யும் பொருட்டு கொண்டு செல்லப்பட்டனர். வழியில் இவர்கள் பாதுகாப்பாக மதுரை ஜெயிலில் அடைக்கப்பட்டு பின், நேற்று (18/02/2020) காலை சேலம் சிறைக்கு 11.00 மணியளவில் கொண்டு வரப்பட்டு உயர் பாதுகாப்பு பிரிவுப் பகுதியின் தனித் தனி ஸெல்களில் அடைக்கப்பட்டனர்.
 

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து ஆங்காங்கே தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மேலும் பாளை சிறையில், ஒருங்கிணைந்த ஸெல்களே இருப்பதால் ஒருவருக்கொருவர் குரூப் சேர்ந்து சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பிருப்பதால் பாதுகாப்பு காரணங்களுக்காக உயர் பாதுகாப்ப தொகுதியான சேலம் ஜெயிலுக்கு மாற்றப்பட்டதாகப் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.