Skip to main content

சேலத்தில் சனிக்கிழமைகளில் கரோனா தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

 

salem district saturday coronavirus prevention camp corporation

 

சேலத்தில், சனிக்கிழமைதோறும் கரோனா நோய் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது.

 

சேலம் மாநகராட்சி நிர்வாகம், கரோனா நோய்த்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த நவ. 28- ஆம் தேதி முதல் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமைகளில் கரோனா பரிசோதனைக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை, காவேரி மருத்துவமனையுடன் இணைந்து நடத்தி வருகிறது.

 

இந்நிலையில், நடப்பு டிசம்பர் மாதத்திற்கான சிறப்பு முகாம் நடக்கும் பட்டியல் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, டிசம்பர் 5- ஆம் தேதி (சனிக்கிழமை) அம்மாபேட்டை மண்டலம் 9- வது வார்டில் வசிக்கும் மக்களுக்கு அல்லிக்குட்டை, தாதம்பட்டி மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 6- வது வார்டு மக்களுக்கு காந்தி நகர் ஐசிடிஎஸ் பகுதியில் உள்ள சித்த மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 1- வது வார்டு மக்களுக்கு ஜாகிர் காமிநாயக்கன்பட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும். 

 

டிச. 12- ஆம் தேதி, கொண்டலாம்பட்டி மண்டலம் 54- வது வார்டு மக்களுக்கு சண்முகா நகர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாமும்; அம்மாபேட்டை மண்டலம் 42- வது வார்டு மக்களுக்கு காசிலட்சுமி கல்யாண மண்டபத்தில் சித்த மருத்துவ முகாமும், அஸ்தம்பட்டி மண்டலம் 5- வது வார்டு மக்களுக்கு பெரிய புதூர், குமரன் நகர் அருணகிரி மெட்ரிக் பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

 

டிச. 19- ஆம் தேதி, சூரமங்கலம் மண்டலம் 1- வது வார்டு மக்களுக்கு காமிநாயக்கன்பட்டி பள்ளி வளாகத்தில் மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 45- வது வார்டு மக்களுக்கு எஸ்எம்சி லைன் மாநகராட்சி பள்ளி வளாகத்தில் சித்த மருத்துவ முகாமும், அம்மாபேட்டை மண்டலம் 10- வது வர்டு மக்களுக்கு புத்து மாரியம்மன் கோயில் தெரு மாநகராட்சி உயர்நிலைப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாமும் நடைபெறும்.

 

டிச. 26- ஆம் தேதி, அஸ்தம்பட்டி மண்டலம் 7- வது வார்டு மக்களுக்கு நாகப்பன் முதன்மை சாலை அய்யன்துரை மாளிகையில் மருத்துவ முகாமும், சூரமங்கலம் மண்டலம் 2- வது வார்டு மக்களுக்கு பெரியம்பாளையம் மாரியம்மன் கோயில் அருகே உள்ள ஐசிடிஎஸ் மையத்தில் சித்த மருத்துவ முகாமும், கொண்டலாம்பட்டி மண்டலம் 51- வது வார்டு மக்களுக்கு ரங்காபுரம் மாநகராட்சி துவக்கப்பள்ளியில் இயற்கை மருத்துவ முகாம்களும் நடத்தப்படுகிறது" இவ்வாறு சேலம் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்