Skip to main content

சினிமாவை பார்த்துவிட்டு ரவுடியான இளம்ரவுடி படுகொலை!!

Published on 13/02/2019 | Edited on 13/02/2019


வேலூர் மாவட்டம் ரவுடிகளின் ராஜ்யபூமியாக மாறிவருகிறது. அடிக்கடி ரவுடிகளுக்குள் மோதல் ஏற்படுவதும், அதில் யாராவது ஒருவர் கொலை செய்யப்படுவதும், அதற்கு பழிவாங்க மீண்டும் கொலை செய்வது என்பது வாடிக்கையாகிவிட்டது. இந்த பிரச்சனையில் போலிஸ் தீவிரமாக களம்மிறங்காமல் பிரச்சனை நடக்கும்போது மட்டும் குற்றவாளிகளை கைது செய்துவிட்டு பின்னர் அமைதியாகிவிடுகிறது. இதனால் காவல்துறை மீது, சட்டத்தின் மீது பயம்மில்லாத ரவுடிகள் கொலை, கடத்தல், கட்டப்பஞ்சாயத்துகளில் சர்வசாதாரணமாக ஈடுப்பட்டுவருகின்றனர்.

 

rowdy murder in vellure; police investigation

 

அப்படி கொலை, திருட்டு, ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட ஒரு இளம் ரவுடி கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளான் வேலூரில்.

 

 

வேலூர் மாநகரம் சைதாப்பேட்டையை சேர்ந்தவன் ரவுடி தமிழரசன். 25 வயதான இவன் மீது காவல்துறையில் 10க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளது. இவனை யாரோ சிலர் கூட்டு சேர்ந்து பிப்ரவரி 12ந்தேதி இரவு படுகொலை செய்துள்ளனர். அவனது உடல் வேலூர் ரத்தினகிரி அருகே சென்னை – பெங்களுரூ தேசிய நெடுஞ்சாலையில் நந்தியாலம் பாலத்தின் அருகே கழுத்து அறுப்பட்ட நிலையில் கிடந்தது. இந்த தகவல் பிப்ரவரி 13ந்தேதி காலை 10 மணிக்கு ரத்தினகிரி போலிஸாருக்கு தெரியவந்து மோப்ப நாய் உதவியுடன் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.

 

rowdy murder in vellure; police investigation

 

 

கொலை செய்யப்பட்ட ரவுடி தமிழரசனின் தாய்மாமனான ரவுடி பிச்சைபெருமாள் என்பவனை சில மாதங்களுக்கு முன்பு, சத்துவாச்சாரி – காங்கேயநல்லூர் இடையே உள்ள ஏரியில் முகத்தை கல்லால் தாக்கி படுகொலை செய்து வீசியிருந்தனர். அந்த வழக்கில் குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் உள்ளனர்.

 

rowdy murder in vellure; police investigation

 

பிச்சைபெருமாளை கொலை செய்தது போட்டி ரவுடியான சத்துவாச்சாரி வீச்சுதினேஷ் தான். அவனை நான் கொல்லாமல் விடமாட்டேன் என சபதம் செய்துள்ளான் தமிழரசன். அதனை அறிந்த தினேஷ் கும்பல் தான் இவனையும் கொலை செய்துயிருக்க வேண்டும் என்கிறார்கள் போலிஸ் தரப்பில் ரவுடிகளை கண்காணிக்கும் சிறப்பு பிரிவினர்.

 

 

 

சினிமாவை பார்த்துவிட்டு கத்தியை எடுத்தால் நம்மை கண்டு நடுங்குவார்கள் என 15 வயது, 20 வயதிலேயே கத்தியை தூக்கினால் இறுதியில் இதுதான் முடிவாக இருக்கும்.

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.