Skip to main content

நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன்!!;அரசியல் கேள்விக்கு பதிலளித்த விஜய்!!

Published on 02/10/2018 | Edited on 02/10/2018

சர்க்கார் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், தயாரிப்பாளர் சன் பிக்சர்ஸ்  கலாநிதிமாறன், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 

VIJAY

 

இந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், என்னுடைய சில படங்கள் வெற்றியடையும் பொழுது எவ்வளவு சந்தோசம் ஏற்படுமோ அதேபோல் அந்த வெற்றிக்கு காரணமான உங்களை (ரசிகர்களை) காணுவதற்கான நிகழ்ச்சிகளில் நான் தொடர்ச்சியாக பங்கேற்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது. இந்த விழாவின் அடையாளம் ஏ.ஆர் ரகுமான் சார். இந்த படத்திற்கு இசையமைக்க அவர் கிடைத்தது சர்க்காருக்கு கிடைத்த ஆஸ்கார் சார். மெர்சலில் கொஞ்சம் அரசியல் இருந்தது ஆனா இதுல அரசியல்ல மெர்சல் பண்ணிருக்காரு இயக்குனர் முருகதாஸ் சார். வெற்றிக்காக பலபேர் உழைக்கலாம் சார் ஆனா நாம வெற்றியே பெறக்கூடாது'னு ஒரு கூட்டம் உழைச்சிட்டு இருக்கு. இது யார் சொன்ன வரி என்று எனக்கு தெரியவில்லை ஆனால் இதை நான் கடைபிடித்து வருகிறேன் ''உசுப்பேத்தறவன் கிட்ட உம்முன்னு கடுப்பேத்தறவன் கிட்ட கம்ன்னும் இருந்தால் வாழ்கை ஜம்முனு இருக்குமாம் உண்மையிலேயே ஜம்முனுதான் இருக்கு.  கட்சி ஆரம்பிச்சு தேர்தல் நடத்தி ஓட்டு வாங்கி சர்க்கார் அமைப்பாங்க ஆனா நாங்க சர்க்கார் அமைச்சிட்டு தேர்தல்ல நிக்கப்போறோம். முடிஞ்சா ஓட்டு போடுங்க நான் படத்தை சொன்னேன். 

 

பேசிக்கொண்டிருந்த பொழுது ஆங்கர் நடிகர் பிரசன்னா நீங்க இந்த படத்தில் முதமைச்சர் ஆக நடிக்கிறீர்கள் என்று கேள்விப்பட்டோம் என்ற கேள்விக்கு நான் முதலமைச்சராக இந்த படத்தில் நடிக்கவில்லை என விஜய் பதிலளித்தார்.

 

அதன்பின் உண்மையாக முதல்வரானால்? என்ற கேள்விக்கு உண்மையில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என கூறினார்.

 

 

மேலும் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் கட்சி காந்தி கையில் இருந்தப்ப எவ்வளவு நல்லா இருந்தது இப்போவும் நல்லதா இருக்கு ஏன்? காந்தி கையில் இருக்கும் பொழுது மட்டும் சூப்பர் டூப்பராக இருந்தது காரணம் காந்தி அவ்வளவு பெரிய யோக்கியராம் சோ அவர பின் தொடர்ந்து வருபவர்களும் அவரை போல சாத்தியவாதியாக இருப்பார்கள். தலைவன் எவ்வழியோ தொண்டனும் அவ்வழியே எனவே ஒன்னு மட்டும் உறுதிங்க தர்மம் மட்டுந்தான் ஜெயிக்கும் ஆனா என்ன கொஞ்சம் லேட்டா ஜெயிக்கும். தேவை ஏற்படும் பொழுது அங்க அடிமட்டத்திலிருந்து ஒருவன் வருவான் அவன் நடத்துவான் அதான் ''சர்க்கார்''.   

சார்ந்த செய்திகள்

Next Story

நிஜ வாழ்க்கையில் நடந்த தனுஷ் படக் கதை - பகிர்ந்த நடிகர்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
kishen das got engaged to his best friend like in dhanush Thiruchitrambalam movie

அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் கிஷன் தாஸ். அதில் சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்த நிலையில், ஹீரோவாக ‘முதல் நீ முடிவும் நீ’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். பின்பு ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் வெளியான சிங்கப்பூர் சலூன் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது தருணம், ஈரப்பதம் காற்று மழை உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில், கிஷன் தாஸுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. இதனைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்த அவர், “அவள் இல்லை என மறுக்கவில்லை. திருச்சிற்றம்பலம் படக் கதை என் நிஜ வாழ்க்கையில் நடந்துள்ளது. என் நெருங்கிய நண்பருடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். 

அவருக்கு தற்போது மஞ்சிமா மோகன், ஆத்மிகா, கௌரி கிஷன் உள்ளிட்ட பல்வேறு திரைப் பிரபலங்கள் கிஷன் தாஸ் பதிவிற்கு வாழ்த்து தெரிவித்து கமெண்ட் செய்துள்ளனர். மேலும் ரசிகர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர்.    

Next Story

நகைச்சுவை நடிகர் சேஷு காலமானார்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
lollu sabha actor seshu passed away

சின்னத்திரையில் பிரபல காமெடி நிகழ்ச்சியான லொள்ளு சபா மூலம் பிரமலமானவர் சேஷு. இதையடுத்து லொள்ளு சபா சேஷு, எனப் பெயர் பெற்றவர் பெரிய திரையிலும் அறிமுகமானார். சந்தானம் நடித்த பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, ஏ1, குலு குலு எனப் பல படங்களில் நடித்துள்ளார். 

சந்தானம் நடித்த ஏ1 படத்தில் இவர் பேசும் “அச்சசோ அவரா... பயங்கரமானவராச்சே அவர்கிட்ட கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்கப்பா” என்ற வசனம் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங்கில் இடம்பெற்றது. மேலும் வேலாயுதம், இந்தியா பாகிஸ்தான், நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர், சந்தானம் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்திருந்தார். 

கடந்த 15ஆம் தேதி மாரடைப்பு காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சேஷு. அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் சேஷூ உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார். அவரது இறுதிச் சடங்கு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள அவரது இல்லத்தில் நாளை காலை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.