Skip to main content

ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா? தம்பிதுரை கேள்வி

Published on 22/10/2018 | Edited on 22/10/2018
M. Thambi Durai

                                                                                                                                        கோப்புப்படம்

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார் எனவும், தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கேள்வி எழுப்பியுள்ளார்.
 

கோவை விமான நிலையத்தில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், 
 

MeToo என்பது பெண்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு. அதில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இவ்விவகாரத்தில் ஆதரவும் இல்லை, எதிர்ப்பும் இல்லை. 
 

பிரதமர் மோடியை சர்க்கஸ் ரிங் மாஸ்டர் எனவும், அதிமுகவினரை சர்க்கஸ் கூடாரம் எனவும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். சர்க்கசில் புலி, சிங்கம் தான் இருக்கும். மேலும் அதிமுகவினரை சிங்கம், புலி என ஸ்டாலின் ஏற்று கொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. அதற்காக ஸ்டாலினுக்கு நன்றி. 
 

திமுக - காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் யார்? தேர்தலுக்கு முன் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திமுக தயாரா? தேர்தலுக்கு பின்னர் பிரதமரை தேர்ந்தெடுப்போம் என திமுக கூறினால், அது கபட நாடகம். மறைமுகமாக திமுக பாஜக உடன்பாடு வைத்துள்ளதால்தான் ராகுல்காந்தியை பிரதமராக அறிவிக்க திமுக தயாராக இல்லை. 
 

அதிமுக தனித்து போட்டியிட்டு 40 தொகுதியிலும் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்கு பின் பிரதமரை முடிவு செய்வோம். 
 

எந்த கூட்டணியிலும் அதிமுக இல்லை. 18 எம்.எல்.ஏ. தகுதி நீக்க வழக்கில் என்ன தீர்ப்பு வந்தாலும் அதிமுகவிற்கு கவலையில்லை. முதல்வர் மீதான சிபிஐ விசாரணை குறித்து கருத்து சொல்ல முடியாது. எடப்பாடி பழனிசாமி மீது எந்த கலங்கமும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறார். திமுக ஆட்சியில் அதிக ஊழல் நடந்தது என முதல்வரே கூறியுள்ளார். 
 

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தல் வர வாய்ப்பில்லை. 5 ஆண்டுகள் முழுமையாக அதிமுக ஆட்சி செயல்படும். அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது என தெரிவித்தார்

 



 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.