Skip to main content

கடல் பாசி எடுக்கச் சென்ற பெண் மரணம்! வடமாநில தொழிலாளர்களைத் தாக்கிய கிராமத்தினர்!  

Published on 25/05/2022 | Edited on 25/05/2022

 

Rameswaram woman passed away villagers in struggle

 

இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரத்தில் அமைந்துள்ளது வடகாடு மீனவர் கிராமம். இந்தக் கிராம மக்களின் பிரதான தொழில் மீன்பிடிப்பு மற்றும் கடல் தொடர்பானதாக இருக்கிறது. இந்தக் கிராம மக்கள் கடல் பாசி சேகரிக்கும் தொழிலிலும் ஈடுபட்டு வருகின்றனர். 

 

வடகாடு கிராமம் பகுதியில் வசித்துவருபவர் பாலு. இவரது மனைவி சந்திரா. சந்திரா அவ்வப்போது கடல் பாசி சேகரிக்க கடலுக்கு செல்வது வழக்கம். எப்போதும் காலையில் சென்று மாலையில் சந்திரா வீடு திரும்புவார். அதுபோல், நேற்று காலை கடல் பாசி சேகரிக்க சந்திரா வீட்டைவிட்டு கிளம்பியுள்ளார். ஆனால், எப்போது போல் மாலை அவர் வீடு திரும்பவில்லை. இதனால், பதட்டமான அவரது கணவர் பாலு, தனது உறவினர்களுடன் பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளார். 


இந்நிலையில் நேற்று இரவு 10.30 மணி அளவில்  வடகாடு அருகில் உள்ள நரிக்குழி என்ற இடத்தில் சந்திரா இறந்த நிலையில் இருந்ததை கண்டறிந்துள்ளனர். மேலும், அவர் இறந்திருந்த இடத்திற்கு அருகில் முனியசாமி என்பவருக்கு சொந்தமான இறால் பண்ணை செயல்பட்டுவருகிறது. அதில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்கள் 6 பேர் மீது பாலு உறவினர்களுக்கும், வடகாடு கிராம மக்களுக்கும் சந்தேகம் ஏற்பட்டு, அவர்களை தாக்கியுள்ளனர். மேலும், அந்த இறால் பண்ணையின் சில பகுதிக்கும் கிராம மக்கள் தீவைத்தனர். 

 

இந்தத் தகவல் காவல்துறையினருக்கு தெரியவரவே, உடனடியாக அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வடமாநில ஆறு பேரையும் மீட்டு, பற்றிய தீயையும் அணைத்தனர். மீட்கப்பட்ட ஆறு பேரையும் காவல்துறையினர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இறந்த சந்திராவின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இந்த வழக்கில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரி இராமேஸ்வரம் - தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் அக்கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த மனைவியின் கையை வெட்டிய கணவன்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
husband cut the hand of his wife who was talking on video call

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பிச்சனூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சேகர் (41 ) நெசவுத் தொழிலாளி இவரது மனைவி ரேவதி (வயது 35) இவர்களுக்கு மூன்று மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகிவிட்ட நிலையில் மூன்றாவது மகள் பள்ளியில் படித்து வருகிறார் .

இந்த நிலையில் ரேவதி கடந்த சில மாதங்களாக சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் பார்ப்பது, போட்டோ போடுவது, ஆன் லைன் நண்பர்களுடன் பேசுவது என அதிக அளவு நேரம் செலவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு  குடும்பத்தில் சண்டை நடந்து வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு ரேவதி வீடியோ காலில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார். வீட்டுக்கு வந்த சேகரை கவனிக்காமல் மனைவி பேசிக்கொண்டே இருந்ததால் ஆத்திரம் அடைந்த சேகர் ரேவதியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவர்களுக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதில்  ஆத்திரமடைந்த சேகர் வீட்டிலிருந்த அருவாமனையை எடுத்தவர், இந்த கை தானே போன் எடுத்து பேசிக்கிட்டே இருக்குது, ரீல்ஸ் பார்க்கச்சொல்லுது, பேசச்சொல்லுது என ரேவதியின் வலது கையை வெட்டியுள்ளார்.

கையில் வெட்டுப்பட்டதால் அலறிய ரேவதியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். வெட்டப்பட்ட கை பலத்த சேதம் அடைந்த நிலையில் அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, சேகரை அழைத்துவந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில், குடும்பத்தை கவனிக்காமல் எப்போது பார்த்தாலும் போன் வைத்துக் கொண்டு யாருடனாவது பேசிக்கொண்டே இருக்கிறார். அல்லது ஏதாவது பார்த்துக் கொண்டே இருக்கிறாள். இதைக்கேட்டதற்கு என்னை எடுத்தெறிந்து பேசினாள். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு வர ஆரம்பித்தது அந்த கோபத்தில் தான் வெட்டினேன் எனக் கூறியுள்ளார்.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.