Skip to main content

அழகிரிக்கு எதிராக ரஜினி ரசிகர்கள்? இமிடேட் செய்யும் 'மதுரை அண்ணன்', முடங்கிக் கிடக்கும் "பயபுள்ள"!

Published on 07/07/2018 | Edited on 07/07/2018

ரஜினிகாந்த்தின் கட்சி அறிவிப்பு வெளியான காலகட்டத்திலிருந்தே, "இதோ ரஜினியை சந்திக்க இருக்கின்றார் அழகிரி, இதனால் தென்மாவட்டங்களுக்குப் பலம்" என அழகிரியின் ஆதரவாளர்கள் தங்களுக்கு சாதகமாக மதுரை முழுக்க கொளுத்திப் போட்டிருக்க, 'ரஜினி ஆசிர்வதித்து துவக்கிவைத்த படம், அழகிரியை சீண்டி எடுக்கப்பட்டதாலேயே  ரிலீஸிற்குத் தயாராகியும் மூன்று வருடங்களாக பெட்டிக்குள் முடங்கிக் கிடக்கின்றது" என அழகிரிக்கு எதிராகப் பேசி ரஜினி அழகிரி சந்திப்பிற்கு செக் வைத்திருக்கின்றார்  ரஜினி மன்ற பொறுப்பாளர் ஒருவர்.

 

 


மதுரை வட்டார மொழியில் மிகவும் பாப்புலரான 'பயபுள்ள' என்ற வார்த்தையை டைட்டிலாகக் கொண்டு, முற்றிலும் புதுமுகமாகவும் அதே நேரத்தில் திரைப்படத்திலுள்ள அனைவருமே ரஜினி ரசிகர்கள் என்பதனை உறுதியாக்கிக்கொண்டு எடுக்கப்பட்டப் படம்தான் தற்பொழுது முடங்கி கிடக்கும் 'பயபுள்ள'. இந்தப் படத்தில் நடிகர் சிங்கமுத்து 'மதுரை அண்ணன்' என்ற பெயரில் அழகிரியின் கேரக்டரை இமிடேட் செய்துள்ளதாக வந்த தகவல்தான் முடக்கத்திற்குக் காரணம் என்கின்றனர்.

அப்படி என்னதான் இருக்கின்றது அந்த திரைப்படத்தில் என்றால், "ஒரு சீனில், ஊரில் மிகப்பெரிய பண்ணையாராக வாழ்பவர் 'மதுரை அண்ணன்' சிங்கமுத்து, அவருடைய அல்லக்கைகள் சிசர் மனோகர் மற்றும் அல்வா வாசு. மதுரை அண்ணன் வீட்டிலிருக்கும் போது, "இப்படியே இருந்தா ஊரில் ஒரு பய நம்மை மதிக்க மாட்டான். நமக்குன்னு மரியாதை வேணும்னா தனிக்கட்சி துவங்குவோம். அப்பத்தான் நாலு பயலுக நம்மை மதிப்பான். நம்மளும் ஜுவக் (ஜு  என்றால் அலப்பறை செய்வது) கொடுக்கலாம்ல" என அல்லக்கைகள் தூபம் போட, "அப்படியாடா சொல்றே, சொல்லு சொல்லு... அப்ப அண்ணன் என்ன செய்யனும்?" என்று கேட்கிறார். முதல்ல பணப்பெட்டியை திறங்க, அள்ளி விடுங்க" என அரசியலுக்கு வரவழைத்து விடுகிறார்களாம்.

 

 


அடுத்த சீனில், குடையிலேயே 'மதுரை அண்ணன் வர்றார்' என எழுதப்பட்டு குடை பிடிப்பவர்களுடன் நடந்து வருவார் சிங்கமுத்து. "அண்ணே... உங்க கட்சியில இவனுக்கு சீட் கொடுங்க!" என அல்லக்கைகள் கேட்க, "நேற்று பேக்கரி வைச்சுட்டு எங்கேயோ மொத்தமாக ஆட்டைய போட்டு வந்தவனெல்லாம் சீட் வாங்கி ஜெயிச்சுட்டு இருக்கான், உனக்கென்ன!" என்பார். அதற்கடுத்த பொதுக்கூட்ட மேடை சீனிலோ, மேடையிலேயே மதுபானத்தைக் குடித்துக்கொண்டு, "எங்களை மாதிரி காசு கொடுத்து ஓட்டு வாங்க உன்னால முடியுமா? ஓட்டு வாங்குறதுல நாங்கதான்டா புது பார்முலாவையே கொண்டு வந்தோம். அததான் இப்ப பயன்படுத்துறீங்க" என மதுரை அண்ணன் பேசிவிட்டு அப்படியே சரக்கைக் குடிப்பார். "என்ன அண்ணே, ராவா குடிக்கிறீங்க" என்று பக்கத்தில் இருப்பவர் கேட்க, "ராவா குடிச்சாலும், தண்ணீர் ஊத்திக் குடிச்சாலும் மக்கள் ஒன்னும் சொல்ல மாட்டாங்க, அதுக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்திட்டால் ஓட்டு வந்திடும்" என்பார் அவர். அது போல அவர் 'டெல்லிக்குப் போறேன், டெல்லிக்குப் போறேன்' என சுற்றியுள்ளவர்களை இந்த வார்த்தையை கூறி பயமுறுத்துவது போல் காட்சி இருக்கும். படம் முழுக்க மதுரை அண்ணனின் செயல்கள் அழகிரியை அப்படியே இமிடேட் செய்வது போல் இருக்கும்" என்றார் திரைப்படத்தில் பணியாற்றிய ஒருவர்.

அழகிரியும் அரசியலில் ஆக்டிவாக இல்லை, ரஜினியும் முழு ஆக்டிவாக இல்லை. தலைவர்கள் இப்படியிருக்க மதுரையில் அழகிரிக்கு எதிராக அரசியல் செய்ய ஆரம்பித்துவிட்டார்கள் ரஜினி ரசிகர்கள்... வெல்லுமா?

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ளழகர் திருவிழாவில் நிகழ்ந்த சோகம்; போலீசார் தீவிர விசாரணை!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy at the Kalalhagar festival Police serious investigation

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர்.  தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம் வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இதனையடுத்து மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அழகருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். 

Tragedy at the Kalalhagar festival Police serious investigation

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவில் இளைஞர்கள் பட்டாக்கத்தியுடன் மோதிக்கொண்டதில் ஒருவர் கொலை செய்யப்பட்டார். சித்திரைத் திருவிழா நடந்த மதுரை மாவட்டம் ஆழ்வார்புரம் பகுதியில் ஏற்பட்ட மோதலில் கத்தியால் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஆழ்வார்புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கையைச் சேர்ந்த சோனையை மர்ம நபர்கள் கத்தியால் குத்தினர். இதனையடுத்து மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் குறித்து மதுரை மாநகர போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். 

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.