Skip to main content

மோடியின் 'பரீட்சைக்கு பயம் ஏன்?' - தமிழ் வடிவ நூலை வெளியிட்ட தாமு

Published on 17/09/2018 | Edited on 17/09/2018
'Why fear the exam?'



பிரதமர் மோடியின் பிறந்தநாளை (செப்.17) தமிழக பாஜகவினர் கொண்டாடிய நிலையில், அவர் எழுதிய 'பரீட்சைக்கு பயம் ஏன் ?' என்கிற நூல் வெளியிடப்பட்டிருக்கிறது. 
 


சென்னை கேளம்பாக்கம் ஆனந்த் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற BLISS 2018  மாணவர்களுக்கான கலை விழாவில் மோடி எழுதிய நூலின் தமிழ் வடிவம் வெளியிடப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் பெருமளவில் திரண்டிருந்தனர். முதல் பிரதியை பிரபல மாணவர் பயிற்சியாளரும் திரைப்பட நடிகருமான  தாமு வெளியிட, கலசலிங்கம் பல்கலைக்கழகம் சேர்மன் ஸ்ரீதர் பெற்றுக்கொண்டார். 
 

'எக்ஸாம் வாரியர்ஸ்' அமைப்பின்  ஒருங்கிணைப்பாளரும் தமிழக பாஜகவின் ஊடகப் பிரிவு மாநில தலைவருமான A.N.S.பிரசாத் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

modi



விழாவில் பேசிய நடிகர் தாமு, "பரீட்சைக்கு பயம் ஏன் என்னும் பிரதமரின் இப்புத்தகம் ஒவ்வொரு மாணவரும், ஆசிரியரியரும், பெற்றோரும் படிக்கவேண்டிய புத்தகம். மாணவர்களுக்காக நேரம் ஒதுக்கி இப்புத்தகத்தை  தந்துள்ள பிரதமருக்கு நன்றிகள். இந்த சமயத்தில் கலாம் ஐயா அவர்கள் இருந்திருந்தால் பிரதமரின் இந்நூலிற்கு மகிழ்வோடு அணிந்துரை எழுதியிருப்பார். அந்தளவுக்கு மாணவ மாணவிகளின் கல்வி அறிவிற்கான புத்தகமாக இருக்கிறது. இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது,  பரிட்சையைக் கண்டு பயப்படுபவர்களிடமிருந்து பயம் விலகிப் போயிருக்கும்" என்றபோது அரங்கம் முழுவதும் கரவொலிகளால் அதிர்ந்தன.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“பிரதமர் மோடி ஊழல் பள்ளியே நடத்தி வருகிறார்” - ராகுல் காந்தி தாக்கு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rahul Gandhi says Prime Minister Modi is running a school of corruption

தேர்தல் பத்திர விவகாரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பிரதமர் மோடி ஊழல் பள்ளி நடத்தி வருவதாகவும் குறிப்பிட்ட ராகுல் காந்தி இது குறித்து அவர் தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியதாவது, “பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் 'ஊழல் பள்ளி' நடத்துகிறார். அங்கு ‘முழு ஊழல் அறிவியல்’ என்ற பாடத்தின் கீழ், அவரே  ‘நிதி வணிகம்’ உட்பட ஒவ்வொரு அத்தியாயத்தையும் விரிவாகக் கற்பிக்கிறார்.

சோதனை நடத்தி நன்கொடை வசூலிப்பது எப்படி?, நன்கொடைகளைப் பெற்ற பிறகு ஒப்பந்தங்கள் எவ்வாறு விநியோகிக்கப்படுகின்றன?, ஊழல்வாதிகளை சுத்தப்படுத்தும் வாஷிங் மெஷின் எப்படி வேலை செய்கிறது?, ஏஜென்சிகளை மீட்பு முகவர்களாக ஆக்கி ‘ஜாமீன் மற்றும் ஜெயில்’ விளையாட்டு எப்படி விளையாடுவது? என்பது குறித்து அவரே விரிவாக பாடம் கற்பிக்கிறார்.

ஊழல் குகையாக மாறியுள்ள பா.ஜ.க தலைவர்களுக்கு, இந்த பாடம் கட்டாயமாகியுள்ளது. இந்தியா கூட்டணி அரசு இந்த தேர்தலில் வெற்று பெற்று ஆட்சி அமைந்ததும், மோடியின் இந்த ஊழல் பள்ளியை பூட்டி இந்த படிப்பை நிரந்தரமாக மூடும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.