சேலம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. சேலம் ஓமலூர் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் ஒரு மணிநேரம் இடியுடன் பலத்த மழை பொழிந்தது. காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்ட நிலையில் இந்த மழையின் வருகையால் சேலம் மாவட்ட மக்களின் உள்ளங்கள் குளிர்ந்தன.
![rain in Salem!!](http://image.nakkheeran.in/cdn/farfuture/tKo0Y7b61G4WIFeERpkqIeb9i5nOcedqy6-AJwXdnGU/1560659815/sites/default/files/inline-images/asasaaassa.jpg)
அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், விராச்சிலை, பொன்னமராவதி ஆகிய பல்வேறு கிராமங்களில் குளிர் காற்றுடன் மிதமான மழை பொழிந்தது. அரை மணி நேரமாக விடாது பெய்த மழையால் ஓரளவுக்கு குடிநீர் பிரச்சினை தீரும் என்று மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேபோல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இடியுடன் பெய்த கன மழையால் சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அரியக்குடி, செஞ்சி, பள்ளிவாசல், பர்மா காலனி ஆகிய நகரின் பல பகுதிகளில் மாலையில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.