Skip to main content

சென்னையில் விட்டுவிட்டு சாரல் மழை

Published on 16/12/2023 | Edited on 16/12/2023
Rain in Chennai

தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியதிலிருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் சென்னை உள்பட 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று பிற்பகலில் இருந்தே விட்டு விட்டு சாரல் மழை பொழிந்து வரும் நிலையில், தற்போது சென்னையில் பல இடங்களில் விட்டுவிட்டு மழை பொழிந்து வருகிறது. சென்னை கிண்டி, அடையாறு, சைதாப்பேட்டை, எம்.ஆர்.சி நகர், மந்தைவெளி ஆகிய பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

அதேபோல் இன்று ராமநாதபுரம், தூத்துக்குடி, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும், மயிலாடுதுறை, நெல்லை, நாகை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்