Skip to main content

குளத்தில் தெர்மாகோலை விட்டு செல்லூர் ராஜூவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

Published on 13/05/2018 | Edited on 13/05/2018
Sellur K. Raju

 

 


 

Sellur K. Raju

 

சில தினங்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை நந்தனத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘நதிகளை இணைத்த பின்னர் என் கண்கள் மூடினால் கூட நான் கவலைகொள்ள மாட்டேன்’ எனப் பேசியிருந்தார். 

 

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டநிலையில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ‘ரஜினியால் ஆட்சியைப் பிடிக்கமுடியாது. அவர் ஆச்சியை வேண்டுமானால் பிடிக்கலாம்’ என கருத்து தெரிவித்தார். அவரது இந்தக் கருத்து காரைக்குடி நகரத்தார் சமுதாய பெண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதேபோல், காரைக்குடி நகரத்தார் சங்கத்தினரும் அமைச்சர் செல்லூர் ராஜூவின் இந்தக் கருத்திற்கு கண்டனங்களை முன்வைத்திருந்தனர்.


இந்நிலையில், நகரத்தார் சமூக பெண்களை தரக்குறைவாக பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ-வை கண்டித்து, புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை நடந்த ஆர்பாட்டத்தில் அங்குள்ள உள்ள செட்டியார் குளத்திற்குள், அந்த சமூக இளைஞர்கள் தெர்மாகோலை விட்டு அமைச்சருக்கு எதிராக கோஷமிட்டனர். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘அரசியலில் ஒரு கத்துக்குட்டி’; அண்ணாமலை vs செல்லூர் ராஜு - வழுக்கும் வார்த்தைப் போர்

Published on 05/08/2023 | Edited on 05/08/2023

 

admk Sellur Raju criticized bjp Annamalai

 

இந்திய அளவில் அதிமுகவும், பாஜகவும் கூட்டணிக் கட்சிகளாக இருந்தாலும், தமிழக அளவில் அந்த கூட்டணி உறவு அவ்வளவு சுமுகமாக இல்லை. தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுகவையும், அதன் தலைவர்களையும் விமர்சித்து வருவதும், அதிமுக தலைவர்கள் அண்ணாமலையை விமர்சித்து வருவதும் தொடர்ந்து கொண்டே வருகிறது. 

 

அந்த வகையில், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, “அண்ணாமலை பாஜகவின் மாநிலத் தலைவர். ஜஸ்ட் லைக் அவ்வளவுதான். எங்களுக்கு மோடி ஜி, அமித்ஷா ஜி, நட்டா ஜி தான் முக்கியம். கூட்டணிக் கட்சியினர் கூட்டத்தில் மோடி, எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் அமர வைத்தார். அவருக்குத் தெரிந்த எடப்பாடி பழனிசாமியின் அருமை அண்ணாமலைக்குத் தெரியவில்லை” எனக் கூறியிருந்தார். 

 

இதுகுறித்து பேசிய அண்ணாமலை, “சிலர் தன்னை அரசியல் விஞ்ஞானிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் விமர்சனத்திற்கு எல்லாம் பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை. எங்களுக்கு மக்கள்தான் எஜமானர்கள்; வேறு எந்த தலைவர்களின் அனுமதியும் எங்களுக்குத் தேவையில்லை” என்று பேசியிருந்தார். இதற்கு அதிமுகவில் யாரை விமர்சித்தாலும் எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஜெயகுமார் தெரிவித்துள்ளார்.

 

இந்த நிலையில் அண்ணாமலைக்கு பதிலளித்துள்ள செல்லூர் ராஜூ, “நான் அரசியல் விஞ்ஞானிக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன் என்று அண்ணாமலை என்னை விமர்சிக்கிறார்; அண்ணாமலை அரசியலில் ஒரு கத்துக்குட்டி என்பது எல்லாருக்கும் தெரியும். அதிமுகவை விமர்சிப்பவர்கள் தமிழ்நாடு அரசியலில் தங்களுக்கான இடம் என்ன என்பதை அறிந்து விமர்சித்தால் நன்றாக இருக்கும்” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

 

 

 

Next Story

“சும்மா தல தலன்னு சொல்றவங்க இல்ல...” - தோனி குறித்து செல்லூர் ராஜூ

Published on 27/05/2023 | Edited on 27/05/2023

 

Sellur Raju on CSK captain Dhoni

 

மதுரையில் பரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதிய வகுப்பறை கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டார்.

 

இதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர் “அமைய இருக்கும் புதிய நாடாளுமன்றத்தில் செங்கோல் அமைப்பதற்கு எல்லோரும் பிரதமரைப் பாராட்ட வேண்டும். இந்த விழாவினை மற்ற கட்சிகள் புறக்கணித்தாலும் திமுக அதில் கலந்து கொள்ள வேண்டும். அதுதான் எங்களது ஆசை. தமிழ்நாடு முழுவதும் மதுவிலக்கு சட்டம் கொண்டு வரவேண்டும், திமுகவின் தேர்தல் அறிக்கையை நிறைவேற்ற வேண்டும் என திருமாவளவன் சொல்லியுள்ளார். ஆனால் மவுண்ட்பேட்டன் நேருவுக்கு வழங்கிய செங்கோல் குறித்து கொச்சைப்படுத்தக்கூடாது. திருமாவளவனை நாங்கள் மதிக்கிறோம். இதை அவர் கொச்சைப்படுத்தக்கூடாது. இதற்கு மதச்சாயம் பூசக்கூடாது. தமிழ்நாட்டில் நாம் தமிழர் என்று சொல்லுவோம். வெளிநாடு போனால் நாம் இந்தியன் என சொல்லுவோம். மொழியால் நாம் தமிழர், இனத்தால் நாம் இந்தியர். இதுதான் இன்று நிலை.

 

திமுக ஜனாதிபதியை மதிக்கவே இல்லை. ஜனாதிபதியாக பதவியேற்ற பெண் முதல்முறை மதுரைக்கு வருகிறார். அவரை வரவேற்க மூத்த அமைச்சர் கூட வரவில்லை. மனோ தங்கராஜை தான் அனுப்பினார்கள். இதுதான் திமுகவின் லட்சணம். ஐபிஎல் போட்டிகளில்; நிச்சயமாக சென்னை அணிதான் வெற்றி பெறும்.  தோனி சாதனை படைக்கனும்.  நாம் எல்லாம் எதிர்பார்ப்பது தல வெற்றி பெற வேண்டும். உண்மையான தல... சும்மா தல தலன்னு சொல்றவங்க இல்ல...” என்றார்.