Skip to main content

எச்.ராஜாவுக்கு ஒரு சட்டம் நக்கீரன் கோபாலுக்கு ஒரு சட்டமா? மறியல் ஆர்ப்பாட்டம்!!

Published on 10/10/2018 | Edited on 10/10/2018

நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக சிந்தாதரிப்பேட்டை காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டார் அவரைப் பார்ப்பதற்காக அவரின் வழக்கறிஞர் என்ற முறையில் சென்ற ம.தி.மு.க.வின் பொ.செ. வைகோவை போலீசார் அனுமதிக்கவில்லை. அதனைக் கண்டித்த, வைகோ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் கைது செய்யப்பட்டார்.

 

இதையடுத்து நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதை தி.மு.க. தலைவர் ஸ்டாலின், சி.பி.எம். கோபாலகிருஷ்ணன், சி.பி.ஐ. முத்தரசன், வி.சி.கட்சியின் திருமா உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் செய்ததோடு அவரை விடுதலை செய்ய வலியுறுத்தினர்.

 

இதனிடையே நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் நகர ம.தி.மு.க. செ. ஆறுமுகச்சாமி பொருளாளர் ரங்கநாதன் தலைமையில் நேற்று  திரண்ட ம.தி.மு.க.வினர் நகரின் பேருந்து நிலையத்திற்குப் பேரணியாய் வந்தனர். அங்கு சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள். அதில் நக்கீரன் ஆசிரியர் கோபால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கோஷமிட்டார்கள். எச்.ராஜாவுக்கு ஒரு சட்டம், நக்கீரன் கோபாலுக்கு ஒரு சட்டமா. விடுதலை செய் விடுதலை செய் நக்கீரன் கோபாலை விடுதலை செய் வைகோவை விடுதலை செய் என கோஷமிட்டனர். அவர்களை சங்கரன்கோவில் போலீசார் கைது செய்தனர்.

 

protest

 

அதே போன்று நெல்லை ஜங்ஷன் அண்ணா சிலை முன்பு புறநகர் ம.தி.மு.க. செ. தி.மு. ராஜேந்திரன் தலைமையில் திரண்ட ம.தி.மு.க.வினர் நக்கீரன் ஆசிரியர் கைதைக் கண்டித்துக் கோஷமிட்டனர். ஆர்ப்பாட்டத்தில் நக்கீரன் கோபாலை விடுதலை செய். வைகோவை விடுதலை செய் என்று கோஷங்கள் எழுப்பினர் அவர்களை ஜங்ஷன் போலீசார் கைது செய்தனர்.

 

அத போல் கோவில்பட்டியில் ம.தி.மு.க. வடக்கு மா.செ. ரமேஷ் தலைமையிலும் நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் வைகோவை விடுதலை செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 10/04/2024

 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சடை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது