Skip to main content

மத்திய, கர்நாடக அரசுகளின் துரோகத்தை முறியடிக்க தமிழக முதல்வர் ராசிமணல் பகுதியை பார்வையிட வேண்டும்; பி.ஆர்.பாண்டியன்!

Published on 01/02/2019 | Edited on 01/02/2019

"ராசிமணல் பகுதியை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சென்று பார்வையிட்டு மத்திய,கர்நாடக அரசுகளின் துரோகத்தை முறியடிக்க வேண்டும். இல்லையென்றால் தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்கிறார் தமிழக காவிரி விவசாயிகள் சங்கங்களின் பொதுசெயலாளர் பி.ஆர்.பாண்டியன்.

 

pr bandian

 

அவர் மேலும்  கூறுகையில், " மத்திய அரசும் கர்நாடக அரசும் கூட்டு சேர்ந்து காவிரியில் தமிழக உரிமையை பறிப்பதற்கான முயற்சியை அரசியல் லாப நோக்கத்தோடு எடுத்து வருகிறார்கள். சட்டத்திற்குப் புறம்பாக ஏற்கனவே 6 அணைகளை கர்நாடக அரசு கட்டி முடித்திருக்கிறது.

 

இந்த நிலையில் உச்ச நீதிமன்றமும் நடுவர்மன்ற இறுதி தீர்ப்பை ஏற்று காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளநிலையில் அந்த ஆணையத்தை முடக்கும் நோக்கத்தோடு கர்நாடக அரசு எடுக்கும் முயற்சிக்கு மத்திய மோடி அரசுதுணை போகிறது.  

 

கர்நாடகத்திலிருந்து தமிழக எல்லை நோக்கி ஓடிவரும் காவிரி நீரை தடுத்து மேகதாதுவில் சட்டத்திற்கு புறம்பாக அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதை சாதகமாக்கிக் கொண்டு அணை கட்டுவதற்கு  கர்நாடக அரசாங்கம் முயற்சிக்கிறது. அதனை நியாயப்படுத்துவதற்கான முயற்சியும் செய்துவருகிறது. சட்டவிரோதமாக அணைகட்டி தமிழகத்தை அழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் குமாரசாமி அரசும் மத்திய மோடிஅரசும் கூட்டு சேர்ந்து செயல்படுவதை நியாயப்படுத்துவதற்கு வடமாநிலங்களை சேர்ந்த பல மொழிகளை கொண்டுவரும்  ஊடகம், பத்திரிகை, செய்தியாளர்களை, அழைத்துவந்து அணைக்கட்டும் பகுதியை பார்வையிட செய்து, தமிழகத்தில் தண்ணீர் கடலில் சென்று கலப்பதை தடுத்து நிறுத்தவே அணைகட்ட உள்ளோம், நாங்கள் உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்குவோம் என நியாயப்படுத்துவதற்கான மறைமுக மோசடி நடவடிக்கையில் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி முயற்சித்து வருகிறார். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

 

அதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழக அரசாங்கம் முயற்சி எடுக்க வேண்டும். தமிழகம் நோக்கி வரக்கூடிய தண்ணீரை தடுத்து அணை கட்ட கர்நாடக அரசுக்கு சட்டரீதியாக உரிமை இல்லை. ஆனால் தமிழகம் வழியே கடலுக்கு செல்லக்கூடிய காவிரி நீரை தடுத்து அணைகட்டி தண்ணீரை தமிழகமும், மின்சாரத்தை கர்நாடகமும், பயன்படுத்திக் கொள்வதற்கு ராசிமணலில் தமிழகம் அணை கட்டுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாகவே சென்று ராசிமணல் பகுதியை பார்வையிட்டு உலகறிய எடுத்துரைக்க வேண்டும்.

 

தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், ஆய்வாளர்கள், வல்லுநர்களைக் கொண்ட குழுவோடு முதலமைச்சர் உடனடியாக அங்கு சென்று பார்வையிடவேண்டும். நாம் வெறும் சட்டத்தை மட்டுமே பேசி, சட்டரீதியாக எதிர் கொள்ளலாம்  என்பது நியாயமாக இருந்தாலும், மத்திய மோடி அரசு, கர்நாடகா குமாரசாமி அரசாங்கத்தோடு கூட்டு சேர்ந்து திட்டமிட்டு சட்டத்தை புறக்கணித்து தமிழகத்திற்கு எதிராக அரசியல் லாபம் கருதி ஒன்றாகி உள்ளனர். ஆனால் நாம் சட்டத்தை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது பொருத்தம் இருக்காது ஆகவே நமக்கு உள்ள சட்ட உரிமைகளை களத்திலிருந்து எடுத்துக்காட்டி வெல்வதற்கான முயற்சியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அவசரகால நடவடிக்கையாக மேற்கொள்ள வேண்டும்.

 

இல்லையெனில் தமிழகம் அழிந்து போகும் என்பதை தமிழக அரசாங்கம் எச்சரிக்கையோடு உணர வேண்டும்."  என்றார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது