Published on 22/12/2021 | Edited on 22/12/2021
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளர் சண்முகநாதன் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (21.12.2021) மாலை மறைந்தார். கலைஞரின் நேர்முக உதவியாளராக சுமார் 48 ஆண்டுகள் பணியாற்றியவர் சண்முகநாதன். தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றிவந்த அவரை, முதல்வராக பொறுப்பேற்ற உடன் தனது உதவியாளராக கலைஞர் அவரை நியமித்துக்கொண்டார்.
இவரது மறைவுக்குத் திமுகவினர் உட்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். அதேபோல், மறைந்த சண்முகநாதன் உடலுக்கு காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் மற்றும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், கனிமொழி, ராஜாத்தி அம்மாள், முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.