Skip to main content

போலீசாக நடித்து கொள்ளையடித்த கள்ளலாட்டரி விற்பனையாளர்கள் !

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
lo

 

தமிழகத்தில் தற்போது இரண்டாம் நம்பர் விற்பனை தான் நீக்கமற நிறைந்து கிடக்கிறது. அதிலும், மணல் கொள்ளையும், லாட்டரி விற்பனையும் போலிசுக்கு தெரிந்தே விற்பனை செய்ய வைக்கிறது. 

 

திருச்சியில் போலிஸ் கமிஷனராக அருண் இருக்கும் போது திருச்சி மாநகரில் விற்பனை செய்த லாட்டரி கும்பல் 50 பேருக்கு மேல் பிடித்து சிறையில் அடைத்து குண்டாஸ் வரை வழக்கு பதிவு செய்தால் மாநகரில் இருந்து கொஞ்சம் குறைத்துக்கொண்டும் புறநகர் மணப்பாறை பகுதியில் மிகப்பெரிய அளவில் சுறுசுறுப்பாக விற்பனை செய்து வருகிறார். இதற்கு போலிசின் முழு ஒத்துழைப்பு இருந்து வருகிறது. 

 

இந்த நிலையில் மணப்பாறையில் விற்பனை செய்யும் மொத்த லாட்டரி வியாபாரியிடம் லாட்டரி சீட்டு விற்னை செய்த பணத்தை வசூல் செய்த மொத்தவியாரிகளின் ஏஜெண்ட் மணப்பாறையிலிருந்து திருச்சிக்கு பஸ் ஏறி வருகிறார். 

 

பஸ் மரவனூர் அருகே சென்று கொண்டிருக்கும் போது தீடீர் என ஓரு கார் வேகமாக வந்து மறித்து பஸ் கண்டெக்டரிடம் நாங்க போலிஸ், இந்த பஸ்லில் கள்ளலாட்டரி விற்பனை செய்யும் ஏஜெண்ட் இங்க பணத்தோடு இருக்கான்னு தகவல் வந்திருக்கு அவனை திருட்டு வழக்கு சம்மந்தமாக விசாரிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தி கீழே இறக்கி கொஞ்ச தூரம் அழைத்து சென்று இருக்கிற பணத்தை எல்லாம் புடிங்கி கொண்டு அடித்து துரத்தியிருக்கிறார்கள். கள்ளலாட்டரி பணம் என்பதால் பாதிக்கப்பட்டவனும் வெளியே சொல்லாமல் அப்படியே அமைதியாகி விட்டார். 

 

இதே போல மணப்பாறை நகரில் லாட்டரி விற்பனை செய்யும் வியாபாரி டிபிஎஸ் கடந்த 25ம் தேதி கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் தங்களை போலிஸ் என்று சொல்லிக்கொண்டு உள்ளே இருந்த 10 இலட்சம் பணத்தையும், 10 பவுன் நகையையும் வலுகட்டாயமாக எடுத்து சென்று விட்டனர். இது குறித்து போலிசுக்கும் தகவல் சொல்லவில்லை. 

 

ஒரு வழியாக பாதிக்கப்பட்ட நபர் போலிசுக்கு தகவல் சொல்ல நினைக்கும் போது போலிசும் – பத்திரிகையாளர்கள் என்கிற போர்வையில் பஞ்சாயத்தில் இந்த பிரச்சனை வெளியே தெரிய வேண்டாம் என்று மறைத்து விட்டார்களாம். 

 

மணப்பாறை பகுதியை சுற்றி கிராமங்களில் சுற்றி உதாரணமாக காட்டுபட்டி சீட்டு கிளப், , கோவில்பட்டி கிளப், என கிராமங்கள் தோறும் இந்த கிளப் அதிகப்படுத்தியும் அதற்கு மாதம் இவ்வளவு தொகை என்று நிர்ணயம் செய்து வசூல் செய்வதால் உளவு பிரிவும் இதை பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் சொல்ல தவிர்த்து வருகிறார்களாம். 

 

ஆனால் லாட்டரி பிரச்சனையில் அடுத்தடுத்து சட்டவிரோத லாட்டரி கும்பலிடம் போலிஸ் போல் நடித்து பணம் பறித்த கும்பல் யார் என்று ஒர்ஜினல் போலிசுக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்காமல் மறைத்து . 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேரளா லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட வாலிபர் மீது வழக்குப் பதிவு

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 A case has been registered against a teenager who was involved in selling Kerala lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவிட்டார். அதன் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு பவானியில் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 11 பேர் கொண்ட கும்பல் பிடிபட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு கருங்கல்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாவட்டம் முழுவதும் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்று போலீசார் தீவிரமாகக் கண்காணித்து வந்தனர்.

 

இந்நிலையில் நேற்று ஈரோடு மாணிக்கம் ஹவுசிங் யூனிட் பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக ஈரோடு வீரப்பன் சத்திரம் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தியபோது சாய்ராம் (35) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை வெள்ளைத் தாளில் எழுதி பரிசு விழும் என்று ஆசை வார்த்தைக் கூறி லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது. இது குறித்து வீரப்பன் சத்திரம் போலீசார் சாய்ராம் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

 

Next Story

லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட பெண் உள்பட 4 பேர் கைது

Published on 01/07/2023 | Edited on 01/07/2023

 

4 people, including a woman, were arrested for selling lottery tickets

 

ஈரோடு மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இதைப்போல் கருங்கல்பாளையம் போலீசார் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கருங்கல்பாளையம் கே.எஸ்.நகர் ஸ்ரீ ரங்கபவனம் திருமண மண்டபம் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு கும்பல் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

 

அந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்துப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டம் ஆத்தூர் முல்லைவாடி இளங்கோ தெருவை சேர்ந்த ரவி (50), ஈரோடு விநாயகர் கோவில் தெரு மூலப்பாளையம் பகுதி சேர்ந்த ஆனந்த் (50), ஈரோடு மாவட்டம் பவானி கேசரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நிர்மலா (36), சேலம் மாவட்டம் ஆத்தூர் காந்திநகரைச் சேர்ந்த தரனீஷ் (21) ஆகியோர் எனத் தெரிய வந்தது.

 

இவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டு எண்களை வெள்ளை தாளில் எழுதியும் ஆன்லைன் மூலமாக பரிசு விழும் எனக் கூறி பொதுமக்களை ஏமாற்றி வந்துள்ளனர். இது குறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நான்கு பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 6 விலை உயர்ந்த செல்போன்கள், 40 கேரளா லாட்டரி சீட்டுகள், ஒரு லேப்டாப், 2 கார்கள் மற்றும் ரூ. 1.30 லட்சம் ரொக்க பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.