Skip to main content

வீடியோ ஆதாரம் கொடுத்தும் நடவடிக்கை இல்லை..! - மிரட்டி அனுப்பியதாக போலீஸார் மீது குற்றச்சாட்டு!

Published on 14/06/2021 | Edited on 14/06/2021
ரகத

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியில் பாஞ்சாலி எனும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அதற்கு பக்கத்து கிராமத்தில் கோட்ட எனும் கிராமத்தில் உயர் சாதியினர் வாழ்ந்து வருகின்றனர். தொடர்ச்சியாக  தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உயர்சாதி மக்களுக்கும் இடையே தொடர் பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கரோனா ஊரடங்கு காலத்தில் பாஞ்சாலி கிராமத்தில் இருக்கும் மாந்தோப்புக்குள், கோட்ட கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் சீட்டு ஆடியுள்ளனர். அப்போது அவர்களுக்கு சரக்குக்கு தேவையான சைடிஸ்ட் தேவைப்படவே, பாஞ்சாலி கிராமத்தில் இருக்கும் ராமமூர்த்திக்கு சொந்தமான மூடியிருந்த மளிகை கடையை திறக்கச்சொல்லி பிரச்சனை செய்துள்ளனர். அதற்கு ராமமூர்த்தி ஊரடங்கு காலம் என்பதால் கடையை திறக்ககூடாது என்று சொல்லியுள்ளார். அதற்கு மஞ்சு, தினேஷ், தூர்வாகன் ஆகியோர் சாதியப் பெயரைச் சொல்லி  ராமமூர்த்தியை அடித்துவிட்டு கடையை கட்டையால் தாக்கியதாகவும், இதன் பிறகு அப்பகுதி மக்கள் ராயக்கோட்டை காவல் நிலையத்தில் சென்று பிரச்சனையை சொல்லியுள்ளனர். ஆனால் எந்த விதமான வழக்கும் பதிவு செய்யாமல் காவல்துறை வழக்கபோல பேசி அனுப்பியதாக கூறப்படுகிறது.

மறுநாள் காலையில் பாஞ்சாலி கிராமத்திற்கு வந்த அந்த இளைஞர்கள் எங்கள் மீது வழக்கு கொடுக்கும் அளவிற்கு உங்களுக்கு துணிச்சல் வந்துவிட்டதா, என்று சாதியப் பெயரைச் சொல்லி தங்களை தாக்கியதாக கூறி பாஞ்சாலி கிராம மக்கள் வீடியோக்களுடன் சென்று மீண்டும் காவல்துறையினரை நாடியுள்ளனர். அந்த வழக்கை எஸ்.ஐ. அருணகிரி என்பவர் கிழித்து வீசியுள்ளார். அதன் பிறகு அந்த மக்கள் காவல்நிலையத்திற்கு உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளது காவல்துறை. மேலும், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை, அதனால் பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று அந்த மக்கள் கேட்டுள்ளனர். அதன் பிறகு  மூன்று காவலர்களை அனுப்பி வைத்துள்ளனர். அடுத்தநாள் மாவட்ட எஸ்.பியை பார்க்க அக்கிராமத்து மக்கள் சென்றுள்ளனர்.

 

எங்களை சாதி ரீதியாக தொடர்ச்சியாக தாக்கி வருகின்றார்கள். அவர்கள் மீது ராயக்கோட்டை போலீஸாரும் சாதகமாக செயல்பட்டு வருகிறார்கள். வன்கொடுமை சட்டத்தில் அவர்களை கைது செய்யவேண்டும் என்று புகார் கொடுத்துள்ளனர். அப்பகுதி பாதிக்கப்பட்ட சிவன் பேசுகையில், " மீண்டும் அவர்கள் எப்போது எங்களை தாக்குவார்கள் என்று தெரியவில்லை, இந்த காவல்துறையும் அவர்களுக்கு சாதகமாக இருந்து வருகிறார்கள். இவர்களின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்களே ஆயுதத்தை எடுப்பதைவிட வேறு வழியில்லை" என்றார். இது தொடர்பாக ராயக்கோட்டை இன்ஸ்பெக்டர் சுப்பரமணியிடம் கேட்டபோது தொடர்பை துண்டித்துவிட்டார். கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. சாய்சரனிடம் கேட்டபோது, " இது தொடர்பாக நாங்கள் விசாரித்துக்கொண்டு இருக்கிறோம். அதன் தொடர்பான நடவடிக்கை நிச்சயம் எடுக்கப்படும்" என்றார். கோட்ட கிராமத்தை சேர்ந்த ஊர் தலைவர் கிருஷ்ணமூர்த்தி  கூறுகையில்,  " எங்க பசங்க செய்த தவறால்தான் இந்த பிரச்சனை உருவாகியுள்ளது. பெட்டிக்கடையில் உருவான பிரச்சனை சாதி கலவரமாக மாறிவிட்டது. இந்த இரண்டு குடிகார பசங்களால்தான் இவ்வளவும் . மற்றபடி இருதரப்பினரும் பேசி முடித்துக்கொள்ளலாம் என்று நாங்கள் சொல்லி இருந்தோம், அவர்கள் அதற்கு வரவில்லை. அதன்பிறகு இருதரப்பினரும் மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்" என்றார் .

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.