Skip to main content

திருட்டு ஆட்டை சமைத்து சக போலீசுக்கு பிரியாணி போட்ட எஸ்.ஐ. டிரான்ஸ்பர் 

Published on 25/07/2019 | Edited on 25/07/2019

 

களவாணி படத்தில் டூவிலரில் தனியோ இருக்கும் ஆட்டுகுட்டியை திருடுவார் கதாநாயகன் விமல். அதே போன்று திருச்சியில் ஆடு திருடி ஒருவரிடம் மீட்ட ஆட்டை பிரியாணி போட்ட எஸ்.ஐ. ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். 

 

a

 

திருச்சி மாவட்ட காவல்துறை உட்பட்ட காவல்நிலையம் வாத்தலை காவல்நிலையம். இதில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் மாரிமுத்து. இவர் 5 நாட்களுக்கு முன்பு இரவு பணி மேற்கொண்டார். அப்போது டூ வீலரில் ஆட்டுகுட்டியோடு ஒருவர் வந்து கொண்டிருந்தார். மாரிமுத்து எஸ்.ஐ.யை பார்த்ததும் பயத்தில் ஆட்டுக்குட்டியை அப்படியே விட்டுவிட்டு டூவீலரில் வேகமாக  தப்பினார். தனியே தவித்துக்கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை மீட்ட மாரிமுத்து வாத்தலை காவல்நிலையத்தில் கட்டி வைத்தார். 

 

ஆடு காணவில்லை என்று யாரும் தேடி வரவில்லை என்பதை அறிந்த எஸ்.ஐ. மாரிமுத்து காவல்நிலையத்தில் கட்டி வைத்திருந்த ஆட்டை அருகே உள்ள பன்னையடிக்கோவிலில் வெட்டி பிரியாணி சமைத்து வாத்தலை காவல்நிலையத்தில் உள்ள சக போலிசாருக்கு விருந்து வைத்தார். எல்லோரும் ருசியாக திருட்டு ஆட்டு பிரியாணியை ருசித்து சாப்பிட்டனர். இது எப்படியோ திருச்சி மாவட்ட எஸ்.பி.ஜியாவுல்ஹக் தகவல் செல்ல திருட்டு ஆட்டை பிரியாணி சமைத்த எஸ்.ஐ மாரிமுத்துவை ஆயுதப்படைக்கு பணிமாற்றம் செய்தார். 
 

சார்ந்த செய்திகள்