Skip to main content

4 மணி நேரம் தவித்த நோயாளி: மருத்துவமனை நிர்வாகம் அலட்சியம்

Published on 05/03/2018 | Edited on 05/03/2018

 

patient


 
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்தவர் அருள்நாதன். (51). புதுக்கோட்டையில் ஒரு தனியார் உணவு விடுதியில் வேலை செய்கிறார். நேற்று வழக்கம் போல தனது மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றவர். புதுக்கோட்டை கோவலர் விடுதி அருகே பின்னால் வந்த வாகனம் மோதிய விபத்தில் தலையில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கதி்னர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 
 

   இன்று காலை அவரை வேறு வார்டுக்கு மாற்றப்பட்டார். தலையில் பலத்த காயம் உள்ளதால் மேலும் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ள நிலையில் மாற்றப்பட்ட வார்டுக்கு அருள்நாதனை சக்கர நாற்காலியில் வைத்து தள்ளி வந்துள்ளனர். ஆனால் அந்த வார்டில் படுக்கை இல்லை. டாக்டர்கள் வந்து யாரையாவது டிசார்ஜ் செய்தால் அதன் பிறகு படுக்கலாம் என்று இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை சக்கர நாற்காலியிலேயே இருக்க வைத்துவிட்டனர். 
 

    தலையில் பலத்த காயத்துடன் சக்கர நாற்காலியில் இருக்க முடியாமல் அடிக்கடி மயக்கடைந்து சரிந்தவரை அருகில் நின்ற உறவினர்கள் தாங்கி பிடித்துக் கொண்டனர். 11 மணிக்கு பிறகு அதாவது 4 மணி நேரத்திற்கு பிறகு 4 பிளாக்கில் 411 படுக்கையில் படுக்க வைத்துள்ளனர்.
 

     சுகாதாரத்துறை அமைச்சரின் மாவட்டத்தில் அவரது முயற்சியால் கொண்டு வரப்பட்ட மருத்துவக்கல்லூரியில் இப்படி நோயாளிகளை படுக்கை இல்லை, இடமில்லை என்று சொல்லி வதைப்பது நல்லதா? அமைச்சர் விஜயபாஸ்கர் தான் கவணிக்க வேண்டும்.
 

செம்பருத்தி.  

சார்ந்த செய்திகள்

Next Story

அச்சுறுத்தும் ஒமிக்ரான்... தமிழ்நாட்டில் தயார் நிலையில் 12 ஆய்வகங்கள்!!

Published on 29/11/2021 | Edited on 29/11/2021

 

கதச

 

ஒமிக்ரான் என்ற உருமாற்றம் பெற்ற கரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தும் நிலையில், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது. தென் அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரஸ், படிப்படியாக இதுவரை 10க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவியுள்ளது. மிகவும் ஆபத்தானதாக இருக்கும் இந்த வைரஸிடம் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தற்போது துரித கதியில் செய்யப்பட்டு வருகிறது. 

 

அதன்படி ஒமிக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க,  குறிப்பிட்ட 12 நாடுகளில் இருந்து பயணிகள் வர கடும் கட்டுப்பாடுகளை தமிழக சுகாதாரத்துறை விதித்துள்ளது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில், வங்கதேசம், மொரிசியஸ், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கரோனா நெகட்டிவ் சான்றிதழ் வைத்திருந்தாலும் விமான நிலையத்தில் மீண்டும் கரோனா பரிசோதனை செய்து, இல்லை என்ற முடிவு வந்த பிறகே அவர்கள் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என்றும், வீட்டிற்கு சென்றும் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஒமிக்ரான் தொற்றை கண்டறிய 12 இடங்களில் இந்த ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. டேக்பாத் என்ற கிட் உதவியுடன் இந்த சோதனை நடத்தப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள். 

 

 

 

Next Story

லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்களை சேதப்படுத்திய யானைகள்! வேதனையில் விவசாயிகள் !

Published on 06/07/2021 | Edited on 06/07/2021
Elephants damage crops worth lakhs of rupees! Suffering farmers

 

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் ஜீரஹள்ளி வனச்சரகத்தில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் யானைகள் அடிக்கடி விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர் கதையாகி வருகிறது.  இந்நிலையில், தாளவாடி அடுத்த கெட்டவாடியைச் சேர்ந்த இளங்கோ என்பவரது 3 ஏக்கர் தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு, வாழை பயிர்களை யானை சேதப்படுத்தியுள்ளது. 

 

இன்று 6 ந் தேதி அதிகாலை வனப்பகுதியில் இருந்து வந்த 8 காட்டு யானைகள்  தோட்டத்துக்குள் புகுந்து  கரும்பு, வாழை பயிரை முடிந்த வரை சாப்பிட்டு விட்டு பயிர்களை மிதித்தும் சேதப்படுத்தியது. சத்தம் கேட்டு எழுந்து பார்த்த விவசாயி யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி பக்கத்துத் தோட்டத்து விவசாயிகளுக்குத் தகவல் தெரிவித்தார். அங்கு வந்த விவசாயிகள் சப்தம் போட்டும் பட்டாசு வெடித்தும் யானைகளைத் துரத்தினர். நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பின் யானைகள் காட்டுக்குள் விரட்டியடிக்கப்பட்டன.  

 

1 ஏக்கர் பரப்பளவில் உள்ள கரும்பு, 500 வாழைகள், 50 தென்னை கன்றுகள் என லட்சம் ரூபாய் மதிப்புள்ள பயிர்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளது. தொடர்ந்து யானைகள் விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களைச் சேதப்படுத்துவதால் அப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.  யானைகளால் சேதமடைந்த விவசாய பயிருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வனப்பகுதியைச் சுற்றி அகழி அமைக்க வேண்டும் எனவும் விவசாயிகள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர்.