Skip to main content

''ஆப்ரேசன் விநாயகா''; அசராத காட்டுயானை;அசத்திய வனத்துறை!!

Published on 18/12/2018 | Edited on 18/12/2018

கோவை மாவட்டம் ஆனைகாடு, தடாகம்,மாங்கரை பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இந்த பகுதிகளுக்கு அடிக்கடி   வரும் 50க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியதால் அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டும்படி   வனத்துறைக்கு  பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்திருந்தனர்.

 

elephant

 

இதனையடுத்து சேரன், விஜய், பொம்பன், வசீம் ஆகிய நான்கு கும்கி யானைகள் சுமார் 2 மாதங்களுக்கு முன்பே வரவழைக்கப்பட்டு பெரும்பாலான காட்டு யானைகள் காட்டிற்குள் விரட்டிக்கப்பட்டது. ஆனாலும் விநாயகன் மற்றும் சின்னத்தம்பி என்ற இரண்டு காட்டு யானைகள் மட்டும் அப்பகுதியிலிருந்து செல்லாமல் தொடர்ந்து அங்கேயே நடமாடி வந்தன. இந்த இரண்டு யானைகளும் தொடர்ந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தியதாக அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை எழுப்பினர். அதனையடுத்து வனத்துறையினர் அந்த இரண்டு யானைகளையும் அடர் வனப் பகுதிக்கு துரத்தியடிப்பதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு ''ஆப்ரேஷன் விநாயகா'' என்ற ஒரு திட்டத்தை வகுத்தனர். 

 

elephant

 

அதன்படி இன்று காலை பெரிய தடாகம் பகுதியில் காட்டு யானை விநாயகனை சுற்றிவளைத்தனர். மேலும் அந்த யானைக்கு வனத்துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவர் குழு துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினர். ஆனால் அப்படி துப்பாக்கியில் மயக்க ஊசி செலுத்தியும் அந்த யானை அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. அதனைத் தொடர்ந்து மேலும் இரண்டு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. அதன் பிறகும் காட்டுயானை நகர்ந்த பாடில்லை. அதன் பிறகு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு லாரியில் ஏற்ற முயற்சித்தனர். வனத்துறையின் முயற்சிகள் எதுவும் பயனளிக்காத நிலையில் காட்டு யானை விநாயகன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தது. இதனையடுத்து மேலும்  நான்காவதாக மயக்க ஊசியை மருத்துவர்கள் செலுத்தியதால் விநாயகன் சோர்வடைந்தது இதையடுத்து லாரியில் ஏற்றப்பட்ட விநாயகன் முதுமலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

யானை துரத்தி வந்ததில் ஆடு மேய்க்கும் தொழிலாளி கீழே விழுந்து படுகாயம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
 goat herdsman fell down after being chased by an elephant

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சுட்ட குண்டா, இருளர் வட்டம் பகுதியை சேர்ந்தவர் சின்னதுரை (40) இவர் 20க்கும் மேற்பட்ட ஆடு மற்றும் மாடுகளை வைத்து வனப்பகுதியை  ஒட்டியுள்ள விவசாய நிலம் மற்றும் வனப்பகுதியில் தினமும் மேய்த்து வந்துள்ளார். வழக்கம் போல் இன்று ஆடு மாடுகளை வனப்பகுதிக்கு ஓட்டி சென்ற அவர் தமிழக ஆந்திர எல்லையான சுட்டகுண்டாவிலிருந்து பெத்தூர்  செல்லும்  சுனை என்ற வனப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது யானை துரத்தி வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்த அவர் கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார்.

பின்னர் தனது  வீட்டிற்கு செல்போன் மூலம் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர் வனத்துறை மற்றும் உமராபாத் காவல் துறையினருக்கு தகவல் அளித்ததன் பேரில் காயமடைந்த அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வரப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கால் மற்றும் முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயத்திற்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் .

மேலும் ஆம்பூர் வனச்சரக அலுவலர் பாபு மற்றும் உமராபாத் காவல்துறையினர் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Next Story

சிக்காத சிறுத்தை! பிடிக்க முடியாமல் தடுமாறும் வனத்துறை!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
 forest department is struggling to catch the elusive leopard

கடந்த 2ஆம் தேதி மயிலாடுதுறை சுற்றியுள்ள பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் கண்டறியப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து பயிற்சி பெற்ற அனுபவம் வாய்ந்த வனத்துறையினர் மற்றும் அதிகாரிகளை வரவழைத்து, தனிக்குழு அமைத்து அந்தச் சிறுத்தையின் நடமாட்டத்தைத் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அதன்படி, சிறுத்தையின் காலடித்தடம் அது சிறுநீர் கழித்ததற்கான அடையாளம், அதன் கழிவு ஆகியவற்றை அடையாளம் கண்டு, சிறுத்தை மயிலாடுதுறை பகுதியில் நடமாடுவதை உறுதி செய்தனர். அதைப் பிடிப்பதற்காக வனத்துறையினர் பல்வேறு முயற்சிகளை செய்து வந்த நிலையில், நான்கு தினங்களுக்கு முன் அரியலூர் மாவட்டம் செந்துறை நகரப் பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தை பொதுமக்கள் பார்த்தனர். இது குறித்து அரியலூர் வனத்துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் அப்பகுதி இளைஞர்களுடன் சிறுத்தையைப் பிடிப்பதற்கு முயற்சி செய்தனர்.

 forest department is struggling to catch the elusive leopard

ஒரு லேத் பட்டறையில் பதுங்கி இருந்த சிறுத்தை அங்கிருந்து தப்பி ஓடியதைப் பலரும் பார்த்தனர். இதையடுத்து சிறப்பு குழுவினர் பெரிய கூண்டை கொண்டு வந்து செந்துரை அருகே உள்ள ஓடை பகுதியில் கூண்டுக்குள் ஆட்டை அடைத்து வைத்தனர். ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு ஆட்டை உணவாக சாப்பிட்டு சிறுத்தை அந்த கூண்டை தேடி வரும் அப்போது அதில் மாட்டிக்கொள்ளும் வகையில் தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால் சிறுத்தை அந்தக் கூண்டுக்குள் வந்து சிக்கவில்லை.

இதைத்தொடர்ந்து செந்துறையைச் சுற்றிலும் உள்ள முந்தரிக்காட்டு பகுதிகளுக்குள் சிறுத்தை பதுங்கி இருக்கலாம் என்று ட்ரோன் கேமரா மூலம் தேடுதல் வேட்டை நடத்தினர். சிறுத்தை நடமாட்டத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுத்தை அரியலூர் மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் அல்லது அருகில் உள்ள கடலூர் மாவட்ட பகுதிகளுக்குள் சென்று இருக்கலாம் என்று வனத்துறையினர் கூறுகின்றனர். தற்போது நிலவரப்படி தினசரி ஒரு நாளைக்கு சுமார் 10 முதல் 15 கிலோமீட்டர் வரை சிறுத்தை இரவு நேரங்களில் இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

 forest department is struggling to catch the elusive leopard

இதனடிப்படையில் அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்ட எல்லைய ஒட்டிய கிராமங்களில் வனத்துறையினர் தங்களது கண்காணிப்பைத் தீவிர படுத்தியுள்ளனர். இதனைப்போன்று கடந்த 2013 ஆம் ஆண்டு பெரம்பலூர் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது பெரம்பலூர் அருகில் உள்ள துறைமங்கலம், கவுல்பாளையம் ஆகிய பகுதிகளில் சிறுத்தையைத் தேடும் பணி தீவிரமாக நடந்தது. நீண்ட முயற்சிக்குப் பிறகு அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க கூண்டுக்குள் ஆட்டை விட்டு காட்டுப்பகுதியில் வைத்தனர். அப்போது அந்தச் சிறுத்தை ஆடு கத்தும் சத்தத்தை கேட்டு அதை கடித்து தின்பதற்காக கூண்டுக்குள் சென்று சிக்கியது. இதனையடுத்து அங்கு சென்ற வனத்துறையினர், அந்தச் சிறுத்தையை சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு சென்று விட்டனர். இவ்வாறு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை பெரம்பலூர் ,அரியலூர்,மாவட்டங்களில் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.