Skip to main content

ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான "ஆன்லைன்" விண்ணப்ப விநியோகம் தொடங்கியது !

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (Teachers Recruitment Board) நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (Tamilnadu Teachers Eligibility Test) "TNTET EXAM - 2019" (28/02/2019) அறிவிப்பாணையை வெளியீட்டது. இந்த தேர்வு "ஆன்லைன்" மூலம் மட்டுமே விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான இணையதள முகவரி  :https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp , மற்றொரு இணையதள முகவரி : http://trb.tn.nic.in/
இதன் படி ஆன்லைன் விண்ணப்பங்கள் தொடங்கும் நாள் : 15/03/2019 , விண்ணப்பிக்க கடைசி நாள் : 05/04/2019 என்று ஆசிரியர் தேர்வு வாரியம் குறிப்பிட்டுள்ளது. 
 

trb exam

மேலும இந்த தேர்விற்கான கட்டணம் ரூபாய் 1000 பொது பிரிவினருக்கு எனவும் , ரூபாய் 500 மற்ற பிரிவினருக்கு தேர்வு கட்டணம் எனவும் தெரிவித்தது. இந்த கட்டணத்தை (Net Banking, Credit Card , Debit Card) மூலம் செலுத்தலாம். இதனை தொடர்ந்து இணைய தள வழியில் விண்ணப்பிப்பது எப்படி ? தொடர்பான முழு வழிகாட்டி நெறிமுறையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு குழுமம் இணையதளத்தில் வெளியீட்டுள்ளது. இந்த தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பாணையில் குறிப்பிட்டுள்ளது.

trb exam


மேலும் ஆன்லைனில் விண்ணப்பிப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு உதவி எண் (HELP LINE NO) அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தொலைபேசி எண் : 044-28272455 ,7373008144, 7373008134 (நேரம் காலை 10.00AM முதல் மாலை : 5.30 PM வரை இந்த உதவி மையம் செயல்படும்) . அதே போல் உதவி மையம்  ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விவரங்களுக்கு https://trbtet.onlineregistrationform.org/TNTRB/index.jsp என்ற இணையதளத்தில் அறியலாம்.

 

பி.சந்தோஷ் ,சேலம்.

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசிரியர் நடத்திய கொடூர சோதனை; அவமானம் தாங்காமல் மாணவி எடுத்த விபரீத முடிவு!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
A cruel experiment conducted by the teacher to student in karnataka

கர்நாடகா மாநிலம், பாகல்கோட்டை பகுதியில் அரசு பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர், பள்ளியில் இருந்து கடந்த 16ஆம் தேதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய அவர், வீட்டில் உள்ளவர்கள் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதனை தொடர்ந்து, வெளியே சென்ற மாணவியின் பெற்றோர், வீட்டுக்கு வந்து பார்த்த போது, தங்களது மகள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகல்கோட்டை போலீசார், மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 

அவர்கள் நடத்திய அந்த விசாரணையில், மாணவி படித்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக ஜெயஸ்ரீ என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ஜெயஸ்ரீ வைத்திருந்த பையில் இருந்த ரூ.2,000 பணத்தை காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதில் சந்தேகமடைந்த ஆசிரியர், 8ஆம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை அழைத்து கேட்டுள்ளார். ஆனால், அந்த மாணவி, தான் அந்த பணத்தை எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். மாணவி உறுதியாக கூறியும் சந்தேகம் அடங்காத ஜெயஸ்ரீ, சக மாணவிகள் முன்னிலையில் மாணவியின் ஆடைகளை களைந்து சோதனை செய்துள்ளார்.

இதில், மன உளைச்சல் அடைந்த மாணவி, பள்ளி முடிந்ததும் மாலை வீடு திரும்பியுள்ளார். மேலும், அவர் சோகம் தாங்காமல் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து, ஆங்கில ஆசிரியர் ஜெயஸ்ரீ மீது வழக்குப்பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.