Skip to main content

மழை நீரில் நடந்து சென்ற முதியவர் மின்சாரம் தாக்கி பலி! 

Published on 12/11/2021 | Edited on 12/11/2021

 

Old man passes away near manthaivelli

 

தமிழ்நாடு முழுவதும் பருவ மழை பெய்துவருகிறது. குறிப்பாக, சென்னையில் சாலை எங்கும் தண்ணீர் தேங்கி நிற்கும் அளவிற்குக் கனமழை பெய்திருக்கிறது. கடந்த சிலதினங்களுக்கு முன்பாக வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நேற்று மாலை சென்னை மாமல்லபுரம் - ஸ்ரீஹரிகோட்டா அருகே கரையை கடந்தது. இதனால், நேற்று சென்னையில் 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்றுவீசியது. இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்தது.

 

இதில் ஆங்காங்கே இன்னும் தண்ணீர் தேங்கி நிற்பதால், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், சில இடங்களில் மழை நீர் சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில் மின் இணைப்பு வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், சென்னை, மந்தவெளி பேருந்து நிலையம் அருகே மழை நீரில் நடந்து சென்றபோது முதியவர் ஒருவர் மின்சாரம் தாக்கி பலியானார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தந்தனர். அதனைத் தொடர்ந்து அங்குவந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் அவரது உடலை மீட்டனர். இறந்தவர் யார் என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையில் மழை

Published on 18/06/2023 | Edited on 18/06/2023

 

Rain at chennai
கோப்புப் படம் 

 

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டுவந்த நிலையில், காலை 8.45 மணி முதல் மிதமான மழை பெய்துவருகிறது. 

 

இந்நிலையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு வங்கக் கடலில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதன் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடர்ந்து கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி மற்றும் அதனை தாண்டியும் வெயில் கொளுத்திவந்தது. இந்நிலையில், இன்று காலை முதல் மேகமூட்டத்துடன் இருந்து திடீரென மழை பெய்ய துவங்கியுள்ளது. வெயில் சுட்டெரித்துவந்த நிலையில் மழையால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். 
 

Next Story

சென்னையில் கொட்டி தீர்த்த மழை 

Published on 02/05/2023 | Edited on 02/05/2023

 

Heavy rain in Chennai
கோப்புப் படம் 

 

 

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுவதால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

 

இதன்படி, சென்னையில் நேற்று பகலில் மிதமான மழை பெய்த நிலையில், இரவு நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்தது. திருவொற்றியூர் பகுதியிலும் மழை வெளுத்து வாங்கியது. வடசென்னையிலும் இடி, மின்னலுடன் கனமழை பெய்தது. 

 

சென்னையில் சாந்தோம், இராயப்பேட்டை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்க்கம், சூளைமேடு, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்தது. பின் நேற்று இரவு முழுவதும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. அதேபோல், திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, நாகை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்தது. 

 

வரும் 4ம் தேதி வரை தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.