Skip to main content

ஆளும்கட்சி அமைச்சர்களை கழற்றிவிட்டு வி.ஐ.பி.யாக மாறிய அதிகாரிகள் 

Published on 21/09/2018 | Edited on 21/09/2018
try

 

திருச்சியில் மாவட்ட அளவிலும், மாநகராட்சி அளவிலும் நடத்தப்படும் அரசு நிகழ்ச்சியில், விழாக்களில் யாருடைய பெயரை தலைமையாக போடுவது என்பது பிரச்சனையில் வாங்கிய திட்டுகளில் தற்போது ஆளுங்கட்சி அமைச்சர்களி்ன் பெயர்களை தவிர்த்து விட்டு அரசு அதிகாரிகளோ திறப்பாளர்களாக மாறிய கதை திருச்சியில் நடைபெற்று வருகிறது. 

 

சமீபத்தில் எம்.பி. நிதியில் கமிஷனர் தலைமையில் கண்காணிப்பு கேமிரா துவங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கமிஷனர் அலுவலகம் சார்பில் அமைச்சர்களுக்கு தகவல் கொடுக்கவில்லை என்பதால் அமைச்சர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. 

 

try

 

இதனால் அதிர்ச்சியடைந்த இரண்டு பேரும் முதல்வர் எடப்பாடி வரை சென்று, எங்களை புறக்கணித்து இந்த அதிகாரிகள் எங்களை நிகழ்ச்சிக்கு அழைப்பதில்லை என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தனர். நீங்க என்னான்னு கண்டிங்க என்று அமைச்சர்கள் இரண்டு பேரும் கோரிக்கை வைக்க, உடனே முதல்வரும் திருச்சி மாவட்ட கலெக்டரையும், மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரனையும் போனில் அழைத்து கண்டித்து எல்லோருக்கும் அழைப்பு கொடுத்து நிகழ்ச்சி நடத்துங்கள் என்று அறிவுறுத்தப்பட்டனர். 

 

இதன் பிறகு நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்களும், எம்.பியும் இணைந்து கலந்து கொண்டு வந்தனர். இந்த நிலையில்.. கடந்த வாரம் திருச்சி தொகுதி எம்.பியும், அதிமுக மாவட்ட செயலாளருமான குமார் எம்பியின் தொகுதி வளர்ச்சி நிதி உதவியின் கீழ் திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் ரேஷன் கடைகள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

try

 

எம்பி நிதியில் நடைபெறும் பணிகள் என்பதால் எம்பி குமார் தலைமையில் விழா நடைபெற்றது. திருச்சி அதிமுகவை பொறுத்தவரை எம்பி குமார் மாவட்ட செயலாளரான பிறகு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் தனி கோஷ்டியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். 

 

இதற்கு முக்கிய காரணம் மாஜி மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சர் என்ற அடிப்படையில் வெல்லமண்டி நடராஜனுக்கு மாவட்ட மற்றும் மாநகராட்சி நிகழ்ச்சிகளில் கொடுக்கப்படுவது போன்றே தற்போதும் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதே. 

 

இத்தகைய சூழ்நிலையில் எம்.பி குமார் பெயரை யார் தலைமையாக போட்டது என்று அமைச்சரின் மகன் ஜவஹர்லால் நேரு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு போன் போட்ட அமைச்சர், மகன் அழைப்பிதழ் ரெடி பண்ணுனது யார்? என்று கேட்டிருக்கிறார். இதனால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். 

இதனால் கூப்பிட்டாலும் தப்பு கூப்பிடலனாலும் தப்பு என்று முடிவு செய்தார்களோ என்னவோ, திருச்சி வேர்ஹஸ் அருகே உள்ள உடற்பயிற்சி விளையாட்டு மையத்தை அமைச்சர்கள், எம்.பிக்கள் என யாருக்கும் அழைப்பு கொடுக்காமல் திருச்சி மாநகராட்சி தலைமையில் திறந்து வைத்தனர். திறப்பாளர் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் என்று கல்வெட்டும் பொறித்து வைத்து விட்டனர். தற்போது அமைச்சர்கள் உள்ளதும் போச்சோ என்று என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் நிற்கிறார்கள். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ஐ.ஜே.கே. நிர்வாகி வீட்டில் பணம் பறிமுதல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Money confiscated at the IJK administrator house

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஐ.ஜே.கே. கட்சியின் நிர்வாகி வினோத்சந்திரன் என்பவரின் வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக வைத்திருந்த ரூ. 1 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர். பெரம்பலூரில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் ஐ.ஜே.கே. நிறுவனர் பாரிவேந்தருக்கு ஆதரவாக வாக்களிக்க இந்தப் பணம் கொடுக்கப்பட இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாரிவேந்தர் தொடர்பான கையேடுகளையும் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். முன்னதாக தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்ய வருவதை அறிந்து தனது வீட்டின் கழிவறையில் வினோத்சந்திரன் பணத்தை பதுக்கியுள்ளார். 

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.