Skip to main content

தேனி மாவட்டத்தில் தொடரும் அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு! ஆட்சியரின் அதிரடி நடவடிக்கை! 

Published on 11/10/2021 | Edited on 11/10/2021

 

Occupancy of government lands in Theni district! Collector's Action!

 

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு, தேனி ஆட்சியர் அலுவலகத்திற்குப் பின்புறம் உள்ள ‘வடவீரநாயக்கன்பட்டி’ பகுதியில் இருந்த அரசு புறம்போக்கு நிலங்களை 100 ஏக்கருக்கு மேல் ஆக்கிரமித்து பட்டா போட்டுக் கொடுத்திருந்தது தெரியவந்தது. இதில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான பெரியகுளம் மேற்கு அதிமுக ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷ், தனது குடும்பத்தினர் பெயரில் பல ஏக்கர்கள் பட்டா போட்டிருப்பது தெரியவந்தது. 

 

இவற்றையெல்லாம் ஆய்வுசெய்த பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப், அதனுடைய ஆவணங்களை எல்லாம் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கும், துறை அமைச்சருக்கும் அனுப்பிவைத்தார். அதைத் தொடர்ந்துதான் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிக்கப்பட்ட அரசு புறம்போக்கு நிலங்கள் 90 ஏக்கரைக் கைப்பற்றி, அதனுடைய பட்டாவைக் கேன்சல் செய்தார். 

 

இதற்கு உடந்தையாக இருந்த 4 தாசில்தார்கள் மற்றும் மூன்று சர்வேயர்களையும் மாவட்ட கலெக்டர் முரளிதரன் அதிரடியாக சஸ்பெண்ட் செய்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட அளவிலும் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வுசெய்ய அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்தார். அதுபோல் அரசு புறம்போக்கு நிலங்களைப் பட்டா போட்டு வாங்கிய அதிமுக பிரமுகர் மீதும் மாவட்ட கலெக்டர்  நடவடிக்கை எடுக்க தயாராகிவந்தார். 

 

இந்த நிலையில், பெரியகுளம் மேற்கு ஒன்றியச் செயலாளர் அன்னபிரகாஷை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியிருக்கிறார்கள் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளர்களான ஒ.பி.எஸ். மற்றும் எடப்பாடி பழனிசாமி. இது அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Occupancy of government lands in Theni district! Collector's Action!
                                                                  முரளிதரன்

 

இந்தநிலையில்தான், கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட அளவில் அதிகாரிகள் அரசு புறம்போக்கு நிலங்களை ஆய்வுசெய்தபோது, அதே பெரியகுளம் வட்டாரத்தில் உள்ள டி.வாடிப்பட்டியில் பட்டா நிலங்களோடு அரசு புறம்போக்கு இடங்களான 56 ஏக்கரை ஆக்கிரமித்து பட்டா போட்டு, அதை கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேருக்கு விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. இப்படி அரசு நிலங்களைப் பட்டா போட்டுக் கொடுத்த இடத்தில், கேரளாவைச் சேர்ந்த ஐந்து பேர் சோலார் பவர் பிளான்ட்டை (சூரிய மின் உற்பத்தி) போட்டிருப்பதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதிகளிலும் அதிரடியாக அதிகாரிகள் களமிறங்கி புறம்போக்கு நிலங்களைத் தொடர்ந்து ஆய்வு செய்துவருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.