Skip to main content

"கெஞ்சிக் கேட்கிறேன்; தற்கொலை முடிவு வேண்டாம்"- மு.க.ஸ்டாலின்!

Published on 13/09/2020 | Edited on 13/09/2020

 

neet exam students dmk mkstalin speech

நீட் தேர்வு அச்சத்தால், தேர்வுக்கு தயாராகி வந்த தமிழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர்.

 

இந்த நிலையில் காணொளி மூலம் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "'மாணவர்களை கெஞ்சிக் கேட்கிறேன்; இனி யாரும் தற்கொலை முடிவை  எடுக்காதீர்கள். நீட் தேர்வுக்கு தயாரான மாணவர்கள் தற்கொலை செய்ததை கேட்கும்போது வேதனையாக இருக்கிறது. பெற்றோர்கள் பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிக் கவலைப்படும் சூழலில் அவர்களுக்கு மன உறுதியைக் கற்றுக்கொடுங்கள். பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுங்கள் ப்ளீஸ்". இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

 

பலத்த  எதிர்ப்புக்கிடையே நீட் தேர்வு இன்று தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்