Skip to main content

நடராஜன் படத்திறப்பு விழா!

Published on 30/03/2018 | Edited on 30/03/2018
ttv


சசிகலாவின் கணவர் நடராஜன் படத்திறப்பு விழா, இன்று காலை 10.30 மணியளவில் தஞ்சாவூரில்  நடைபெற்றது. இந்த விழாவில், கவிஞர் வைரமுத்து, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா.பாண்டியன், சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

seeman


விழாவைத் தொடங்கி வைத்துப் பேசிய டிடிவிதினகரன், சசிகலா நலமாக இருக்க வேண்டும் என்பதற்காகப் பல தியாகங்களைச் செய்தவர் நடராஜன். சசிகலாவுக்கு மாப்பிள்ளை பார்த்தபோது, டாக்டர்கள், இன்ஜினியர்கள் எனப் பல வரன்களைப் பார்த்தனர். நடராஜன் நல்லவர் என்பதால், அவரை என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சசிகலாவுக்குத் திருமணம் செய்து வைத்தனர் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.