Skip to main content

மீனவர்கள் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய, மாநில அரசுகள்...

Published on 12/10/2018 | Edited on 12/10/2018
nagai strike


 

டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை  மற்றும்  காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த பத்து நாட்களாக  காலவரையற்ற  வேலை நிறுத்தப்போராட்டத்தை நடத்திவருகின்றனர்,  போராட்டத்தை தொடர்ந்து இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு 1000க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது.  


டீசல் விலை உயர்வை கண்டித்து நாகை காரைக்கால் மாவட்ட மீனவர்கள் கடந்த மூன்றாம் தேதி முதல்  காலவரையற்ற  வேலைநிறுத்தப்  போராட்டத்தில்  ஈடுபட்டு  வருகின்றனர்.  இன்று பத்தாவது நாளை எட்டியுள்ள வேலை நிறுத்த போராட்டத்தால் ஒரு  லட்சத்திற்கும்  மேற்பட்ட  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கசெல்லாமல்  போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இதனால்  நாகை  மற்றும்  காரைக்கால்  துறைமுகங்களில்  2000 விசைப்படகுகள்  ஐந்தாயிரம்  நாட்டுப்படகுகள்  கரைகளில்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன மீனவர்களுக்கு வழங்கப்படும் டீசலுக்கானவரியையும் 
முற்றிலும் நீக்க வேண்டும்  விசைப்படகுகளுக்கு  வழங்கப்படும்  1800 லிட்டர் மானியடீசலை  4 ஆயிரம் லிட்டராக உயர்த்தி வழங்க வேண்டும்.  
 

இலங்கையில்  உள்ள  தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டு தர வேண்டும்  என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி  இந்த வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது.  10 நாட்கள் சென்ற நிலையில் இதுவரை அரசு சார்பாக எவ்விதமான பேச்சிவார்த்தைகளும் நடைபெறாத சூழலில் இதனை அடுத்து போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக இன்று மாவட்டத்தின் பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர் பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் நாகை புத்துார் ரவுண்டானா மற்றும் அண்ணாசிலை உள்ளிட்ட இரு வேறு இடங்களில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் அவர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
 

இதனை தொடர்ந்து  போராட்டத்தில் ஈடுப்பட்டவர் அனைவரையும் போலீசார் கைது செய்தனர். சாலை மறியல் காரணமாக திருவாரூர் நாகை மற்றும் நாகை வேளாங்கண்ணி சாலைகளில்  ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

செஞ்சுரிக்கு மத்தியில் சிலிர்க்க வைத்த மழை

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
summer rain in madurai

பல இடங்களில் வெயில் செஞ்சுரி அடித்து வரும் நிலையில் ஒரு சில இடங்களில் பெய்த மழை மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக மதுரையின் நகரப் பகுதிகளில் பரவலாக மழை பொழிந்து வருகிறது.

மதுரையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மதுரையின் நகரப் பகுதி மற்றும் கோரிப்பாளையம், தல்லாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஒரு சில இடங்களில் நீர் தேங்கியதால் இருசக்கர வாகனங்களில் செல்வோர் சிறிது சிரமத்திற்கு உள்ளாகினர்.

மதுரையின் பழங்காநத்தம், பெரியார் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை முதல் மழை பெய்த நிலையில் பிற்பகலுக்கு மேல் தற்பொழுது கோரிப்பாளையம் தல்லாகுளம் பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. அதேபோல் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாட்டில் அடுத்த மூன்று மணி நேரத்தில் 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பின்படி நீலகிரி, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், சேலம், நாமக்கல், கரூர், தேனி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, சிவகங்கை ஆகிய 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.