Skip to main content

ஆத்தூர் அருகே 3வது மனைவி அடித்து கொலை; கணவர் வெறிச்செயல்!

Published on 23/02/2019 | Edited on 23/02/2019

ஆத்தூர் அருகே, தனது மூன்றாவது மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர், மண்வெட்டியின் கைப்பிடியால் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் அகரம்புதூரைச் சேர்ந்தவர் சிங்காரம் (60). கூலித்தொழிலாளி. இவருடைய முதல் மனைவி திருமணமான ஓரிரு மாதத்திலேயே சிங்காரத்தைப் பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அவர் இரண்டாவதாக பெரியம்மாள் என்பவரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் பிறந்தனர். பெரியம்மாளும் கடந்த 24 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

 

Murder of 3rd wife by Husband near Aathur

 

இதையடுத்து மூன்றாவதாக அகரம்புதூரைச் சேர்ந்த சுமதி (40) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தங்கம் (21), வேலு (19), சக்தி (13) ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். 

 

 

சொந்த ஊரில் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் சிங்காரம், ஆத்தூர் கொட்டாம்பாடியில் உள்ள மோகனசுந்தரம் என்பவரின் பண்ணையில் வேலைக்குச் சேர்ந்தார். மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அதே பண்ணைக்குச் சொந்தமான நிலத்திலேயே குடிசை வீடு கட்டி குடியேறினார். 

 

 

இந்நிலையில் சுமதிக்கு, அங்கு பண்ணைக்கு வேலைக்கு வரும் ஆண்கள் சிலருடன் தவறான தொடர்பு இருப்பதாக சிங்காரம் சந்தேகப்பட்டார். அது தொடர்பாக அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். 

 

Murder of 3rd wife by Husband near Aathur

 

வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 22, 2019) அதிகாலை 5 மணியளவில், கணவன், மனைவி இருவரும் பசுமாடுகளிடம் பால் கறப்பதற்காக குவளைகளுடன் கொட்டகைக்கு வந்துள்ளனர். அப்போதும் அவர்கள் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

 

 

ஆத்திரம் அடைந்த சிங்காரம், கீழே கிடந்த மண்வெட்டியின் மர கைப்பிடியை எடுத்து சுமதியின் தலையில் 

 

பலமாக தாக்கினார். அடுத்தடுத்து தாக்கியதில் மண்டை உடைந்து ரத்தம் வெளியேறியது. இந்த தாக்குதலில் சுமதி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் இறந்தார். மனைவியை கொன்றுவிட்டு சிங்காரம் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

 

 

வீட்டில் இருந்து எழுந்து வந்த மூன்று பிள்ளைகளும் ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடக்கும் தாயைப் பார்த்து அலறித்துடித்தனர். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள், தலைவாசல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். 

 

 

டிஎஸ்பி பொன்கார்த்திக்குமார், காவல் ஆய்வாளர் சரவணன் மற்றும் காவலர்கள் சம்பவம் இடம் விரைந்து சென்று சடலத்தைக் கைப்பற்றி விசாரித்தனர். சடலத்தை, உடற்கூறாய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவான சிங்காரத்தை தேடி வருகின்றனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.