Skip to main content

முல்லைப்பெரியாறு அணையை சுற்றிப் பார்க்க ஹெலிகாப்டர் வசதி!

Published on 15/03/2020 | Edited on 15/03/2020

முல்லைப்பெரியாறு உள்பட கேரளா பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களை சுற்றுலாப் பயணிகள் சுற்றி பார்க்க ஹெலிகாப்டர் சேவைக்கான சோதனை ஓட்டம் நடந்து வருகிறது.

mullaiperiyar dam helicopter facilities tourist happy

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக- கேரள எல்லையான குமுளி, தேக்கடி பகுதியில் பெரியாறு அணை உள்ளது. அதுபோல் கண்ணகி கோவிலும் தமிழக- கேரள எல்லையில் அமைந்துள்ளது. பெரியாறு அணையும், கண்ணகி கோவிலையும் பார்க்க சுற்றுலா பயணிகள் வந்து ரசித்து விட்டு போவது வழக்கம். இந்த நிலையில் சுற்றுலா பயணிக கேரளாவிலுள்ள எர்ணாகுளம், திருவனந்தபுரம், வயநாடு ஆகிய பகுதிகளுக்கு போக்குவரத்திற்காக ஹெலிகாப்டர் சேவை தொடங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

mullaiperiyar dam helicopter facilities tourist happy

அதுபோல் எர்ணாகுளம், திருவனந்தபுரம், வயநாடு பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் ஹெலிகாப்டர் மூலம் குமுளி, தேக்கடி, முல்லை பெரியார், கண்ணகி கோயில் உள்ளிட்ட இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு ஒட்டகத்த மேட்டுக்கு வருவார்கள். இப்படி கேரளாவில் உள்ள சுற்றுலாத் தளங்களை ஹெலிகாப்டர் மூலமே சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்காக தனியார் நிறுவனம் ஒன்று ஹெலிகாப்டர் சேவையை தொடங்கியுள்ளது.


அதற்கான சோதனை ஓட்டம் நேற்று குமுளியில் நடைபெற்றது. காலை 10.00 மணிக்கு சோதனை ஓட்டம் தொடங்கிய நிலையில், மதிய இரண்டு மணி வரை சோதனை ஓட்டம் நடைபெற்றது. தற்பொழுது கரோனா பீதி மக்கள் மத்தியில் நிலவி வருவதால், அதனுடைய தாக்கம் தணிந்த பின்பு இந்த ஹெலிகாப்டர் சேவை தொடரும் என அந்த தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது. ஹெலிகாப்டர் மூலம் கேரளாவில் உள்ள சுற்றுலாத் தலங்களை சுற்றுலாப் பயணிகள் பார்ப்பதற்காக உருவாக்கப்பட்டிருப்பதைக் கண்டு தமிழக- கேரளா மக்கள் மத்தியில் சுற்றுலாப்பயணிகள் மத்தியில் உற்சாகமும் நிலவி வருகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து; 10 பேர் பலி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Malaysia Military Helicopter incident 

இரு ஹெலிகாப்டர்கள் மோதிய விபத்தில் 10 பேர் பலியான சம்பவம் மலேசியாவில் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகே உள்ள லுமித் நகரத்தின் வின் பெரக் பகுதியில்   இரு ராணுவ ஹெலிகாப்டர்கள் நடுவானில் கடற்படை ஒத்திகைக்காக பயிற்சியில் ஈடுபட்டிருந்தன. இத்தகைய சூழலில் எதிர்பாராத விதமாக இரு ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைக்கின்றன.

இந்த விபத்தில் 10 பேர் பலியானதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மலேசிய நாட்டின் கடற்படை தினத்தின் 90 ஆம் ஆண்டு நிகழ்ச்சிக்காக நடந்த ஒத்திகையின்போது இந்த கோர விபத்து நிகழ்ந்ததாகக்  கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.