Skip to main content

'மாமியார் - மருமகள் வெற்றி' - விருதுநகரில் ருசிகரம்!

Published on 22/02/2022 | Edited on 22/02/2022

 

'Mother-in-law - daughter-in-law wins' - Delicious in the award city!

 

விருதுநகரில், தி.மு.க. கூட்டணியில் மாமியார் மருமகள் வெற்றி பெற்றுள்ளனர்.

 

விருதுநகர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. 20 வார்டுகளில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது. விருதுநகர் நகராட்சியின் 26- வது வார்டில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தேஸ்வரி (மருமகள்) வெற்றி பெற்றுள்ளார். 27- வது வார்டில் அவரது மாமியார் பேபி (காங்கிரஸ்) வெற்றி பெற்றுள்ளார். பேபி ஏற்கனவே இரண்டு முறை கவுன்சிலராக இருந்திருக்கிறார்.

 

வேற்றுமை பாராட்டும் உறவுகள் என விமர்சிக்கப்படும் 'மாமியார்- மருமகள்' உறவில், அடுத்தடுத்த வார்டுகளில், ஒரே கட்சியின் வேட்பாளர்களாகப் போட்டியிட்டு, வெற்றியிலும் ஒற்றுமைக் கொடி நாட்டியுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்