![mk stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/_5-3SaXNIdCQ_MHtE0W80lHkrTVmGhCp9EFMrrbPzo4/1535021202/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-08-23%20at%2009.32.56.jpeg)
சென்னை கமலாலயத்தில் உள்ள வாஜ்பாய் அஸ்திக்கு திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.
முன்னாள் பிரதமரும், பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அடல் பிகாரி வாஜ்பாய் உடல் நலக்குறைவால், கடந்த 16-ம் தேதி மறைந்தார். அவரது உடல், 17-ம் தேதி முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, வாஜ்பாயின் அஸ்தி தமிழகத்தில் 6 இடங்களில் கரைக்கப்பட உள்ளது. இதற்காக, சென்னை கொண்டுவரப்பட்டுள்ள வாஜ்பாயின் அஸ்தி, தியாகராயநகரில் உள்ள பாஜகவின் மாநில தலைமை அலுவலகத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
![mk stalin](http://image.nakkheeran.in/cdn/farfuture/kmrqPTdoLCm4Y73oQkpXT2bgvqWeIDWT7BGMuLzPkAI/1535021224/sites/default/files/inline-images/WhatsApp%20Image%202018-08-23%20at%2009.33.01.jpeg)
இந்நிலையில், இன்று காலை திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், வாஜ்பாயின் அஸ்திக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் மாநில பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர். தொடர்ந்து மற்ற தலைவர்களும் வாஜ்பாயின் அஸ்திக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.