Skip to main content

தீபாவளி போனஸ் கொடுத்து தொகுதியை தக்க வைக்க போராடும் அமைச்சர்கள்!

Published on 24/10/2018 | Edited on 24/10/2018

தமிழகத்தில் ஆளும்கட்சி அமைச்சர்கள் இந்த ஆட்சி வந்ததில் இருந்து மக்களை சந்திப்பதிப்பதை விட டெண்டர்களில் பங்கு போட்டுக்கொள்வதிலேயே குறியாக இருந்து வந்தனர். இந்த நிலையில் தற்போது எம்.பி. தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என்கிற தகவல் தொடர்ந்து வெளியாகும் நிலையில் அமைச்சர்கள் எல்லோரும் தங்கள் தொகுதிகளை தக்கவைத்துக் கொள்வதற்காக பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் திருச்சியில் உள்ள அமைச்சர்கள் வெல்லமண்டிநடராஜன், வளர்மதி. 

வெல்லமண்டி நடராஜன் !

உடல்நிலை சரியில்லாத காரணத்தால் என்னால் முன்பு போல் செயல்படமுடியவில்லை என்று தன்னுடைய மா.செ.பதவி வேண்டாம் என முதல்வரிடம் சொன்னார் அமைச்சர். இதை எதிர்பார்த்தது போலவே மாவட்ட செயலாளர் பதவியை திருச்சியோட எம்.பி குமாருக்கு கொடுத்தார். எம்.பி.குமாரும் இது தான் வாய்ப்பு என தெரிந்து விறுவிறுவென்று மாநகர் முழுவதும் ஆலோசனை கூட்டம் நடத்தி நிர்வாகிகள் முதல் தொண்டர்கள் வரை தன் பக்கம் வலைத்து போட்டார். இதனால் அமைச்சர் வெல்லமண்டிநடராஜனுக்கு கட்சிக்குள், அதிகாரிகள் மட்டத்திலும் முக்கியத்துவம் குறைந்து போவதை ஜீரணிக்க முடியாமல் தொடர்ந்து மா.செ. மீது புகார் கொடுத்துக்கொண்டே இருந்தார். இதனால் அமைச்சர் மா.செ. இடையே அடிக்கடி பஞ்சாயத்து நடைபெறுவது வாடிக்கையாக இருந்து வந்தது. 

 

minister



இப்படி எம்.பி.குமாரின் இந்த அதிரடி அரசியலில் அரண்டு போன அமைச்சர் வெல்லமண்டி இழந்த மாவட்ட செயலாளர் பதவியை மீண்டும் தனக்கு வேண்டும் என்று சமீபத்தில் முதல்வரிடம் முறையிட்டார். முதல்வரும் அதை கேட்டும் கேட்காத மாதிரி இருந்ததால் அதிர்ச்சியடைந்த அமைச்சர். சரி மாவட்ட செயலாளர் பதவி மீண்டும் பெற வாய்ப்பு குறைவு என உணர்ந்த அமைச்சர் தன்னுடைய தொகுதியையாவது காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று என்னுடைய தொகுதியை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி வந்த முதல்வரை வரவேற்பதற்காக அமைச்சர் சார்பில் அவரே தன்னுடைய சொந்த செலவில் தன் தொகுதியில் உள்ள பகுதி செயலாளர்கள் பெயரை இவர்களே போட்டு தொகுதி சார்பா வரவேற்பதாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள். அதில் மா.செ. குமாரை ஓரம்கட்டியிருக்கிறார்கள். பொறுப்பாளர்களை வார்டுகளில் சந்தித்து இந்த வருடம் உங்களுக்கு ஸ்பெஷல் போனஸ் போட்டு உங்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறேன் என்றும், அதே போல தொகுதியில் இலவச வேட்டி சேலை நிகழ்ச்சி எல்லாம் மா.செ. இல்லாமல் தன்னிச்சையாக கொடுக்க ஆரம்பித்திருக்கிறார். இதே தொகுதியில் தான் முதல்வரின் நிழல் என்று அழைக்கப்படும் ஆவின்பால் சேர்மன் கார்த்திகேயனும் இருக்கிறார். அவரும் இந்த தொகுதிதான் வாங்கிட வேண்டும் என்று கணக்கு போட்டு அரசியல் காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார்கள். 



அமைச்சர் வளர்மதி ! 

ஜெ.வுக்கு நீதிமன்ற உத்தரவால் பதவியை பறிகொடுத்தால் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு ஜெயித்து அமைச்சர் ஆனார் வளர்மதி. இதன் பிறகு கட்சியில் அவருக்கு அமைப்பு செயலாளர் பதவியும் கூடுதல் பொறுப்பு கிடைத்து. இதனால் முத்திரையர் சமூகத்தின் ஒட்டுமொத்த பிரதிநிதி என்று யாரையும் தன் கூட வைத்துக்கொள்ளாமல் தன் உறவினர்களுக்கு முக்கியம் கொடுத்து வந்தார். 

 

minister



இந்த நிலையில்தான் இதே சமூகத்தை சேர்ந்த முன்னாள் மா.செவும் அமைச்சருமான பரஞ்சோதி ராணி என்கிற மருத்துவர் கொடுத்த பாலியல் புகாரில் தன்னுடைய அமைச்சர் பதவி கட்சி பதவி என அனைத்தையும் பறிக்கொடுத்தவர் தற்போது ஓ.பி.எஸ். மூலம் மீண்டும் கட்சியில் அமைப்பு செயலாளர் பதவி கிடைத்தது. தற்போது பரஞ்சோதிக்கு கட்சிக்குள் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதும் ஏற்கனவே ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டவர் என்பதால் அவர் ஸ்ரீரங்கத்தை கைப்பற்ற நினைப்பதும். அமைச்சர் வளர்மதிக்கு பெரிய அதிர்ச்சியில் இருப்பதால் இவ்வளவு தொகுதி பகுதி செயலாளார்களை கண்டு கொள்ளாத அமைச்சர் தற்போது தீபாவளிக்கு போனஸ் போட்டு கவனிக்கிறேன் சொல்லி பொறுப்பாளர்களை தக்கவைத்துக்கொள்ள பெரும்பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்



இப்படி அமைச்சர்கள் எல்லோரும் தன்னுடை தொகுதியை தக்கவைத்துக்கொள்ள முயற்சி செய்து கொண்டிருந்தாலும், இந்த அணி பிரிந்து போனது பல நிர்வாகிகள் அணி மாறியதும், திரும்பி வந்ததில் பலருடைய நிர்வாகிகளின் பொறுப்பாளர்கள் பதவி காலியாக உள்ளது. ஆனால் இவற்றை எல்லாம் பொறுப்பாளர்கள் பட்டியல் தலைமை கழகத்திற்கு அனுப்பியும் இன்னும் பொறுப்பாளர் பட்டியல் வெளிவராமல் இருப்பதால் எவ்வளவுதான் தீபாவளி போனஸ் பணம் என்று தொண்டர்களை ஆசை காட்டினாலும், கட்சி பொறுப்புகள் நிரப்படாத வரை கட்சிகாரர்கள் அமைச்சர்களை நம்புவது கடினம்!

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

பொன்முடி விவகாரம்; ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு பரபரப்பு கடிதம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (14.03.2024) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.