Skip to main content

அமைச்சரின் உதவியாளர் பெயரில் போலி பணி ஆணை வழங்கியவர் கைது

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

    புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரிக்கு இன்று மதியம் 1.30 மணிக்கு அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு அவர் பின்னால் சுற்றிவரும்  புதுக்கோட்டை மச்சுவாடி, கண்ணன் நகர் 3 வீதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற விக்னேஷ்வரன் மற்றும் கறம்பக்குடி தாலுகா பிலாவிடுதி கார்த்திகேயன் (23) மற்றும் கறம்பக்கடி தாலுகா நரங்கியபட்டு பிரபாகரன் (33) ஆகிய 3 பேரும் டீன் மீனாட்சி சுந்தரத்திடம் சென்று ஒரு பணி நியமன ஆணையை கொடுத்து கார்த்திகேயனுக்கு மருத்துவமனையில் மருந்தாளுநர் பணி வேண்டும் என்று கேட்டுள்ளனர்.

 

a


    அந்த பணிநியமன ஆணையை வாங்கிப் பார்த்த டீன் அந்த மூன்று பேரையும் அமரச் சொல்லிவிட்டு போலிசாருக்கு தகவல் கொடுத்ததுடன் மாவட்ட குற்றப்பிரிவுக்கு ஒரு புகாரும் கொடுத்துள்ளார். அதில் போலியாக எனது கையெழுத்தை போட்டுக் கொண்டு என்னிடமே வந்து வேலைக்காண உத்தரவை கொடுக்கிறார்கள். நான் விசாரித்த வகையில் கார்த்திகேயன் பிரபாகரன் மூலமாக விக்னேஷ்வரன் பழக்கமாகி ரூ. 2 லட்சம் வாங்கிக் கொண்டு விக்னேஷ்வரன் இந்த போலி உத்தரவை கொடுத்துள்ளார் என்று கூறியுள்ளார். 


    கடந்த ஒரு வருடமாக அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னால் சுற்றி வரும் விக்னேஷ்வரன் அமைச்சர் செல்லும் இடங்களில் எல்லாம் அவரது செல்போன் உள்பட அனைத்தையும் வைத்துக் கொண்டு அவர் நிழல் போலவே பின்னால் நின்று கொண்டிருப்பவர். மற்றவர்களிடம் தான் அமைச்சர் உதவியாளர் என்று சொல்லிக் கொண்டு பல்வேறு இடமாறுதல், பணி நியமன ஆணைகளை வழங்கி உள்ளார். தற்போது போலியாக டீன் கையெழுத்து போட்டிருப்பது தெரிய வந்ததால் மேலும் விசாரணை செய்தால் பல உத்தரவுகள் வழங்கியதில் சிக்க வாய்ப்புகள் உள்ளதாக காவல் துறையில் கூறுகின்றனர்.


    மேலும் புதுக்கோட்டைக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடிக்கு அமைச்சர் முன்னிலையில் சால்வை அணிவித்து அந்த படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன், ஆளுநர் புதுகை வந்த போது அவரை பார்க்க பலரும் அனுமதிக்கப்படாத நிலையில் அமைச்சரின் உதவியாளர் என்று சொல்லி ஆளுநருக்கு மலர் கொத்து கொடுத்தார். இந்த படங்களும் வெளியிடப்பட்டுள்ளது. கூடவே சுற்றபவர் என்பதால் மாவட்ட ஆட்சியர் கணேஷ் முன்னிலையில் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுக்குளம் அருகே ஆவின் பூத் அமைக்க உத்தரவு வழங்கியுள்ளார்.
    ஆனால் அமைச்சர் பின்னால் இருக்கும் நபர் என்பதால் அமைச்சரின் பெயருக்கு கலங்கம் எற்படலாம் என்று விசாரனையை இத்துடன் முடித்துக் கொள்ள மேலிடத்தில் இருந்து தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 


    இது குறித்த அமைச்சர் தரப்பில்.. இந்த விக்னேஷ் அமைச்சரின் உதவியாளர் இல்லை. அதனால் தான் போலிக் கையெழுத்து என்றதும் உடனே அவரை கைது செய்ய போலிசாரிடம் கூறியுள்ளார் அமைச்சர் என்றனர்.


    தேர்தல் நேரத்தில் பொள்ளாச்சி சம்பவம், புதுக்கோட்டை சம்பவம் போல பயங்கர பூதங்கள் கிளம்புவதால் ஆளுங்கட்சியினர் கலக்கத்தில் உள்ளனர்.
                

சார்ந்த செய்திகள்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார். 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.