Skip to main content

பாதாள சாக்கடையை சீரமைக்கும் பணிகளைத் துவங்கிவைத்த அமைச்சர் மற்றும் ஆட்சியர்!

Published on 26/07/2021 | Edited on 26/07/2021

 

Minister and Collector who started the work of repairing the underground sewer

 

திருச்சி மாநகராட்சியில் உள்ளே பாதாள சாக்கடைகள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் கிடப்பதால் அவற்றை சரிசெய்ய தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்திவந்தனர். இந்நிலையில், அதனை 65 வார்டுகளிலும் சீரமைக்க திட்டங்கள் வகுக்கப்பட்டு இன்று (26.07.2021) அதற்கான துவக்க விழா உழவர் சந்தை பகுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் இப்பணிகளைத் துவங்கி வைத்த நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

 

இந்தப் பணிகள் குறித்து  மாவட்ட ஆட்சியர் கூறுகையில், “பாதாள சாக்கடை சீரமைக்கும் பணிகளை மூன்று பகுதிகளாகப் பிரித்து செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் அத்திட்டத்தின் கீழ் விடுபட்ட மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட பகுதிகளுக்குப் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுவருகிறது. 377.21 கோடி மதிப்பீட்டில் 3 பணிகளும் மற்றும் 335.07 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. திருச்சி நகராட்சியாக இருந்த காலகட்டத்தில் 1987 தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு 34 ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில், இப்பகுதியில் அடிக்கடி பாதாள சாக்கடைகளில் அடைப்பு ஏற்படுவதோடு கசிவு ஏற்படுகிறது.

 

இதனால் பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படுவதால் நகர திட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட பகுதிகளில் 18 வார்டுகளில் முழுவதுமாக 16 வார்டுகளில் பகுதியாகவும் மொத்தம் 34 வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் குழாய்களை மறு சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள மதிப்பீடு செய்யப்பட்டு, 201 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கழிவுநீர் குழாய் 210 கி.மீ நீளமும், பிரதான கழிவுநீர் குழாய் நீளம் 7.24 கி.மீட்டரும், 7 லிப்டிங் ஸ்டேஷன்களும் அமைக்கப்படவுள்ளன. இந்தப் பணிகள் அனைத்தும் 55,155 வீடுகளுக்கு இணைக்கப்படவுள்ளது. புதிய கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்படுவதால் இனி மழைக் காலங்களில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும்” என்று தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Next Story

தவறி விழுந்த தச்சு தொழிலாளிக்கு நேர்ந்த சோகம்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Tragedy of the fallen carpenter

தஞ்சை சிங்கபெருமாள்குளம் மெயின் ரோடு ரெட்டி பாளையத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி. இவரது மகன் ராஜேந்திரன் (வயது 49). தச்சு தொழிலாளி. இவரது மனைவி ஹேமா (வயது 44). திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் இல்லை. ராஜேந்திரன் திருவரங்கம் மாம்பழ சாலையில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் தங்கி இருந்து தச்சு வேலை செய்து வந்தார்.

இந்நிலையில் வேலையின் போது தவறி கீழே விழுந்தார். இதில் காயப்பட்ட அவரை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் ஆனால் சிகிச்சை பலனின்றி ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார். இது குறித்து திருவரங்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.