Skip to main content

மைக் செட் கணவனால் கொல்லப்பட்ட நாட்டுப்புறப் பாடகி; பிரேதப் பரிசோதனையில் அதிர்ச்சி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
mick set is a country singer who was incident by her husband

மதுரையில் நாட்டுப்புறப் பாடகி மரணமடைந்த விவகாரத்தில் கணவரே மனைவியை கொன்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் மாரடைப்பால் பாடகி உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், போலீசார் விசாரணையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.

மதுரையில் பல்வேறு கிராமங்களில் திருவிழாக்களில் நாட்டுப்புறப் பாடல்களைப் பாடி வந்தவர் மதிச்சயம் கவிதா. இவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதேபோல் திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜன். இவர் பல்வேறு கிராம திருவிழாக்களில் மைக் செட் போடும் தொழில் செய்து வருகிறார். மனைவியைப் பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் கவிதாவிற்கும் நாகராஜனுக்கும் திருவிழா மேடைகளில் பழக்கம் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை மதிச்சியம் பகுதியில் உள்ள அவருடைய அம்மா வீட்டுக்கு கவிதா சென்றுள்ளார். அங்கு சென்ற நாகராஜன், கவிதாவிடம் பணம் கேட்டுள்ளார். அவர் சொன்னபடி 60 ஆயிரம் ரூபாய் பணத்தை எடுத்துக் கொடுத்துள்ளார்.

தொடர்ந்து நேற்று முன்தினம் பேசிக்கொண்டிருந்த பொழுது திருப்பரங்குன்றத்தில் வீடு எடுத்து ஒன்றாக தங்குவதற்காகத் தான் பணம் கேட்டேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு விருப்பமில்லை என கவிதா தெரிவித்ததோடு, பணத்தை திரும்ப கொடுக்குமாறு கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட சண்டையில் கவிதாவின் கழுத்தை நெரித்து நாகராஜன் கொலை செய்துள்ளார்.

கவிதாவிற்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விட்டதாக உடனடியாக ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார் நாகராஜன். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் பிரேதப் பரிசோதனை அறிக்கையில், கவிதாவின் கழுத்து எலும்புகள் உடைந்து இறந்தது தெரியவந்தது. இதனையடுத்து நாகராஜனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில் அவர் கொலை செய்ததை ஒப்புக் கொண்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டார்.

மதுரையில் நாட்டுப்புறப் பாடகி கணவரால் கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

மதுரையில் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ கொண்டாட்டம் - தமிழக அரசு தகவல்!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Tamil Poet's Day' Celebration in Madurai - Tamil Nadu Government Information!

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்ப்பில் பாவேந்தர் பாரதிதாசனின் 133 ஆம் பிறந்தநாள் நிகழ்வு தமிழ்க் கவிஞர் நாளாக நாளை (29.04.2024) காலை 10.30 மணிக்கு மதுரை உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாக அரங்கில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வு தமிழ்நாடு இயல், இசை, நாடகமன்றம் வழங்கும் கலை நிகழ்ச்சியோடு நிகழ்வு தொடங்குகிறது. தொடக்க விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் ஔவை அருள் நோக்கவுரை ஆற்றவுள்ளார். இந்நிகழ்விற்கு மதுரை மாவட்ட ஆட்சியர் மா.சௌ.சங்கீதா தலைமையுரை வழங்கவுள்ளார்.

பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் தலைமையில் 'பாரதிதாசன் படைப்புகளில் விஞ்சி நிற்பது தமிழ் உணர்வே! சமுதாய உயர்வே' என்ற தலைப்பில் பட்டிமன்றமும், புலவர் செந்தலை கவுதமன் தலைமையில் 'பாவேந்தர் கண்ட படைப்புக்களங்கள்' என்ற தலைப்பில் கருத்தரங்கமும் முனைவர் சந்திர புஸ்பம் இசையரங்கமும் கவிஞர் நெல்லை ஜெயந்தா  தலைமையில் 'பாவேந்தரின் பார்வைகள்' என்ற தலைப்பில் கவியரங்கமும் நடைபெறவுள்ளது. மதுரை குரு மருத்துவமனையின் மருத்துவர் ச.கு.பாலமுருகன் நிறைவுரை வழங்கவுள்ளார். இந்நிகழ்வில் தமிழறிஞர்களும் பேராசிரியர்களும் அரசுப்பணியாளர்களும் தமிழார்வலர்களும் கல்லூரி மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாரதிதாசன். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் புரட்சிக்கவி என்றும், பாவேந்தர் என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர் ஆவார். தமிழாசிரியர், கவிஞர், திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் ஆவார்.