Skip to main content

வெடி விபத்து; போலீசார் அதிரடி

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

mayiladuthurai incident Police action taken

 

மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் தனியாருக்குச் சொந்தமான ராமதாஸ் பயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் வாணவெடி தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வந்துள்ளது. இந்த ஆலையில் வழக்கம் போல் தொழிலாளர்கள் வாணவெடி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக நாட்டு வெடி தயாரிக்கும்போது தீப்பிடித்து வெடி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் வாணவெடி தயாரிப்பில் ஈடுபட்டிருந்த 4 தொழிலாளர்கள் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

 

இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்புப் படை வீரர்கள், மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும் விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதே சமயம் பொறையார் போலீசார் சம்பவம் இடத்தில் விசாரணை நடத்திய பிறகு உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு சுமார் 100 மீட்டர் தூரத்திற்குச் சிதறி விழுந்துள்ளன எனத் தெரிவித்துள்ளனர்.

 

இந்நிலையில், இந்த வெடி விபத்து தொடர்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மோகனை பொறையார் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். மேலும் வெடி விபத்து தொடர்பாக அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வாணவெடி தயாரிக்கும் இடத்தில் நிகழ்ந்த வெடி விபத்தில் சிக்கி 4 தொழிலாளர்கள் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்