Skip to main content

மே தினம் -  200 இடங்களில் செங்கொடியேற்றி சிபிஎம், சிஐடியு கொண்டாட்டம்

Published on 01/05/2018 | Edited on 02/05/2018
aituc

 

புதுக்கோட்டை மாவட்டத்தின் அனைத்து ஒன்றியங்களிலும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சிஐடியு தொழிற்சங்கம் சார்பில் செங்கொடியேற்றி மேதின விழா கொண்டாடப்பட்டது.

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்தில் மூத்த தோழர், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.ஜியாவுதீன் கொடியேற்றினார். மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், செயற்குழு உறுப்பினர் சி.அன்புமணவாளன், நகரச் செயலாளர் சி.அடைக்கலசாமி, சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா. வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், துணைத் தலைவர் ஆர்.சோலையப்பன், கணேஷ், சுரேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

இதே போல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைத்து ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் கிளைகளிலும் செங்கொடியேற்றி இனிப்பு வழங்கி மேதினவிழா கொண்டாடப்பட்டது. இதேபோல சிஐடியு இணைப்புச் சங்கங்களான கட்டுமானம், முறைசாரா, ஆட்டோ, தையல், கூட்டுறவு, பஞ்சாலை, அனைத்துப் போக்குவரத்து, உள்ளாட்சி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் சார்பிலும் சிஐடியு கொடியேற்றி மேதின விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

மாலையில் புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களில் சார்பில் மேதினப் பேரணியும், சின்னப்பா பூங்கா அருகில் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு சிஐடியு மாவட்டத் தலைவர் க.செல்வராஜ் தலைமை வகித்தார்.  ஏஐடியுசி மாவட்டச் செயலாளர் வீ.சிங்கமுத்து முன்னிலை வகித்தார். 

 

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் வே.துரைமாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன் ஆகியோர் சிறப்புரையாற்றினார். சிஐடியு மாவட்டச் செயலாளர் க.முகமதலிஜின்னா, துணைத் தலைவர் ப.சண்முகம், எம்.ஜியாவுதீன், எஸ்.பாலசுப்பிரமணியன், வி.அரசுமுகம், கு.செல்வராஜ், பொருளாளர் சி.அடைக்கலசாமி, ஏஐடியுசி மாவட்டத் தலைவர் கே.ஆர்.தர்மராஜன், துணைச் செயலாளர் த.செங்கோடன் உள்ளிட்டோர் பேசினர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தலை சீர்குலைக்க விஷமிகள் பொய் பிரச்சாரம்! சிபிஎம் வேட்பாளர் புகார்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
CPM candidate complains that poisoners are spreading lies to disrupt elections!

தேர்தலை சீர்குலைக்க சமூக வலைத்தளங்களில் விஷமிகளால் சில வீடியோவை வைத்து பொய் பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிபிஎம் வேட்பாளர்  சச்சிதானந்தம் தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.                              

இந்தநிலையில் இந்த தேர்தலை சீர்குலைக்க சில விஷமிகள் வாட்ச் அப் போன்ற வலைத் தளங்களில் பொய்யான வீடியோவை பரப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் திண்டுக்கல் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடமும் தேர்தல் ஆணையத்திடமும் புகார் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மீது அவதூறு பரப்பும் வகையில் வெட்டி ஒட்டப்பட்ட வீடியோ ஒன்றை வாட்ச் அப் சமூக வலைதளங்களில் விஷமிகள் பரப்பி வருகிறார்கள். உடனடியாக தேர்தல் நடத்தும் அலுவலர் இதில் தலையிட்டு இந்த அவதூறு பரப்பும் ஒளிபரப்பை தடை செய்ய வேண்டும். அவ்வாறு அவதூறு பரப்பியவர்கள் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று ஆர்.சச்சிதானந்தம் தனது புகார் மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

“கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்” - கே. பாலகிருஷ்ணன்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
State Secretary of the Communist Party of India in Chidambaram K. Balakrishnan voted

சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் காலையில் இருந்து பொதுமக்கள் அவர்களது வாக்கினை ஆர்வமுடன் செலுத்தி வருகின்றனர். இதில் சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் அவரது மனைவி கட்சியின் மாநில குழு உறுப்பினர் ஜான்சி ராணியுடன் சென்று வாக்கினை பதிவு செய்தார்.

அப்போது அவர் வாக்குச்சாவடி மையத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், கடந்த 2019 தேர்தலை விட இந்த தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் மகத்தான வெற்றி பெறுவார்கள்.  தமிழகத்தில் உள்ள வாக்காளர்கள் மத்தியில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என தெளிவாக உள்ளனர். மோடி வெற்றி பெற முடியாது என்பதை பல ஆய்வுகள் கூறுகிறது.

தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இந்தியா கூட்டணி தலைவர்கள் மேற்கொண்ட பிரச்சாரம் பொதுமக்களின் வாழ்வாதாரம், அரசியல் பிரச்சனைகளை முன்னிறுத்தி இருந்தது. கூட்டாட்சி தத்துவத்தையும் இந்தியாவின் பன்முக தன்மையை பாதுகாப்பது. விலைவாசி உயர்வை தடுப்பது. வேலையில்லா திண்டாட்டத்தை தீர்க்க வேண்டும் என்ற மக்களின் அடிப்படையிலான பிரச்சனைகளை வலியுறுத்தி பிரச்சாரம் மேற்கொண்டுள்ளோம். இது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்  எனக்கூறினார்.