Skip to main content

சட்டத்தை மதிக்காத பாஜகவினரை கைது செய்வதில்லை–திருமுருகன்காந்தி குற்றச்சாட்டு

Published on 02/10/2018 | Edited on 03/10/2018

மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி. மனித உரிமைக்கு எதிராக தமிழகரசு செயல்படுவதையும், பொதுமக்களை பாதிக்கும் அரசின் திட்டங்களை, செயல்பாடுகளை எதிர்த்தும் குரல் கொடுத்தும் போராடியும் வரும் திருமுருகன்காந்தி, ஐ.நா வின் மாநாடுகளில் கலந்துக்கொண்டு இந்தியாவின் பொய் முகத்தை அங்கு தோலுரித்துவருகிறார். இதனால் இந்தியாவுக்கு சர்வதேச அரங்கில் பல நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

 

thirumuru

 

இதனால் அவரை முடக்க திட்டமிட்ட மத்திய – மாநில புலனாய்வுத்துறைகள் திருமுருகன் மீது வழக்குகளாக பதிவு செய்துவந்தன. ஓரு மாதத்துக்கு முன்பு வெளிநாட்டில் இருந்து விமானம் வழியாக பெங்களுரூவில் வந்து இறங்கியவரை பெங்களுரூ போலிஸார் கைது செய்து தமிழக காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். சென்னை போலிஸார் பழைய புகார்களை தூசு தட்டி எடுத்து இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசினார் என கைது செய்து நீதிபதி முன்பு நிறுத்தினார். நீதிபதி ரிமாண்ட் செய்ய மறுத்து ஜாமீனில் விடுதலை செய்து அனுப்பினார். நீதிபதி வீட்டை விட்டு வெளியே வந்தவரை வேறு ஒரு வழக்கில் கைது சென்னை புழல் சிறையில் செய்து சிறையில் அடைத்தனர்.

 

 

அங்கிருந்து வேலூர் மத்திய சிறைக்கு மாற்றினர். சில தினங்களுக்கு முன்பு சிறையில் மயங்கி விழுந்த திருமுருகன்காந்தியை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சரியான உணவு உண்ணாமை, ரத்தத்தில் பொட்டாச்சியம் அதிகம்மிருந்தது போன்றவை தான் அவர் உடல் நலம் கெடுவதற்கு காரணம் என கண்டறிந்த தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து கடந்த 3 நாட்களாக சிகிச்சையளித்து வந்தனர்.

 

 

உடல் ஓரளவு சீரடைந்ததும் அக்டோபர் 2ந்தேதி அவரை மருத்துவமனையில் இருந்து சிறைக்கு மாற்றினர். அதே நேரத்தில் திருமுருகன்காந்தி மீது போடப்பட்டுயிருந்த 24 வழக்குகளில் இருந்தும் நீதிமன்றம் பிணை வழங்கியிருந்தது. அதனை தொடர்ந்து அக்டோபர் 2ந்தேதி மாலை 4 மணிக்கு வேலூர் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டார். 55 நாள் சிறைவாசத்துக்கு பின் பிணையில் சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தியை மே 18 அமைப்பின் தோழர்கள் மாலை அணிவித்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

 

thirumurugan

 

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய திருமுருகன்காந்தி, என் மீது தொடர்ச்சியாக வழக்குகள் பதிவு செய்து என்னை சிறையிலேயே வைத்திருக்க உத்தரவிட்டது மத்தியில் ஆளும் மோடி அரசு. அதனை தமிழகத்தை ஆளும் எடப்பாடி அரசு கடைப்பிடித்தது. அது இனியும் செய்யும். தமிழகத்தில் சுத்தமாக கருத்து சுதந்திரத்துக்கு இடமில்லை. அரசுகளை எதிர்த்து ஏதாவது ஒரு வார்த்தை பேசினாலே வழக்கு போட்டு கைது செய்கிறார்கள். அரசு சாசனத்துக்கு விரோதமான அரசுகள் செயல்படுகிறது. சட்டத்தை துச்சமாக மதித்து செயல்படும் பாஜகவினர் இங்கு கைது செய்யப்படுவதில்லை. ஆனால் மக்களுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வரும் திட்டங்களை எதிர்த்து பேசும் என்னைப்போன்ற சமூக செயல்பாட்டாளர்கள் மீது தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறது. அப்படித்தான் என்மீத 24 பொய் வழக்குகள் பதிவு செய்து வைத்துள்ளன என்றார்.

 

 

சிறையில் இருந்து வெளியே வந்த திருமுருகன்காந்தி சென்னை செல்லும் வழியில் வேலூர் மாநகரில் உள்ள பெரியார் சிலைக்கு திருமுருகன்காந்தி மாலை அணிவித்தார்.

சார்ந்த செய்திகள்

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.  

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேர் விடுதலை!

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
6 Rameswaram fishermen freed

ராமேஸ்வரம் மீனவர்கள் வங்கக் கடலில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில் கடந்த ஜனவரி 22 ஆம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் 6 பேரை இலங்கைக் கடற்படை கைது செய்திருந்தனர். மேலும் அவர்களின் இரு படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடிக்கும் பகுதிக்கே வந்து சிங்களப் படையினர் அத்துமீறி கைது செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த கைது சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதே சமயம் இலங்கை கடற்படை கைது செய்த தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இந்நிலையில் இது குறித்து விசாரணை நடத்திய பிறகு கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம் மீனவர்களின் இரு விசைப்படகுகளையும் நாட்டுடைமையாக்கி உத்தரவிட்டுள்ள சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.