Skip to main content

மது, லஞ்சம், கந்துவட்டியை ஒழித்தால்தான் நாடு வளர்ச்சி அடையும்! மதுரை சின்னப்பிள்ளை சொல்கிறார்!!

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
ch


மது, லஞ்சம், கந்துவட்டி ஆகிய சமூகத்தீமைகளை முற்றிலும் ஒழித்தால்தான் நாடு வளர்ச்சி அடையும் என்று பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள மதுரை சின்னப்பிள்ளை கூறினார்.


சேலத்தில், ஏஸ் பவுண்டேஷன் என்ற பெயரில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பு தொடக்கவிழா சனிக்கிழமை (பிப்ரவரி 9, 2019) நடந்தது. மதுரையைச் சேர்ந்த களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களின் தூதரும், ஏற்கனவே ஸ்த்ரீ புரஸ்கார் விருது பெற்றவரும், பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவருமான சின்னப்பிள்ளை, குத்துவிளக்கேற்றி கூட்டமைப்பை தொடங்கி வைத்தார்.

 


பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: ‘’கடந்த 1990ம் ஆண்டிலிருந்து களஞ்சியம் என்ற மகளிர் சுயஉதவிக்குழுவை தொடங்கி, செயல்பட்டு வருகிறேன். நாடு முழுவதும் எங்கள் அமைப்பில் 8 லட்சத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்வதற்கு முன், நான் உள்பட பல பெண்களுக்கு நேரடியாக வங்கிகளுக்குச் செல்வதோ, காவல்நிலையம், ரயில் நிலையம் போன்ற பொது அலுவலகங்களுக்கு செல்வது குறித்த அறிவும், துணிச்சலும் இருந்ததில்லை.


 

ஆனால் இன்றைக்கு அந்த நிலையெல்லாம் அடியோடு மாறிவிட்டது. வங்கிகள் முதல் எந்த ஒரு பொது இடங்களுக்கும் மகளிர் சுய உதவிக்குழு பெண்கள் துணிச்சலுடன் செல்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களுக்கு விழிப்புணர்வு வந்துவிட்டது. வறுமையில் இருந்தும் மீண்டு வந்திருக்கின்றனர். சிறுசேமிப்பு மற்றும் கல்விக்கடனுதவிகள் மூலம் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்திருக்கின்றனர்.

 

c


எங்கள் அமைப்பில் உள்ள 8 லட்சம் குடும்பங்களில் சுமார் 2 லட்சம் குடும்பங்கள் மதுவினால் பாதிக்கப்பட்டு உள்ளன. இங்கே மதுவும், கந்துவட்டியும், லஞ்ச லாவண்யமும் பெரும் சமூகத்தீமைகளாக உள்ளன. இவற்றை முற்றிலும் ஒழித்தால்தான் நாடு முழுமையான வளர்ச்சி அடையும். 

 


மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கு முன்பு கல்விக்கடன் உதவித்தொகை திட்டத்தை எல்.ஐ.சி மூலம் மத்திய அரசு செயல்படுத்தி வந்தது. இப்போது அந்த திட்டம் நிறுத்தப்பட்டுவிட்டது. மீண்டும் அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.’’ இவ்வாறு சின்னப்பிள்ளை கூறினார்.

 


ஏஸ் பவுண்டேஷன் அமைப்பின் தலைவர் பா.சிவராணி கூறுகையில், ''சேலம் மாவட்டத்தில் மட்டும் எங்கள் அமைப்பில் 3385 மகளிர் சுய உதவிக்குழுக்களில் 52 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பில் அங்கம் வகிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த 600 பேர் இதுவரை குடிப்பழக்கத்தினால் மரணம் அடைந்துள்ளனர். அவர்களில் 100 பேர் பெண்கள். மதுவையும், லஞ்சத்தையும் கண்டிப்பாக ஒழிக்கப்பட வேண்டும். நாடு முழுவதும் இயங்கும் சுய உதவிக்குழுக்களை ஒருங்கிணைக்கும் திட்டமும் உள்ளது’’என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இவர்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே போதுமானது'' - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு 

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

"It is enough that the Dharmapura Adheena Kurumaka Sannithans support us" - Principal M.K.Stal's speech

 

மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தருமபுரம் ஆதீன கலைக் கல்லூரியில் 75 வது பவளவிழாவின் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பேசிய தமிழக முதல்வர், 'ஆலயங்களில் அன்னைத் தமிழ்; மூவாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் கோயில் நகைகள் மீட்பு; அறநிலையத்துறை சார்பில் 10 கலை கல்லூரிகள்; கோவில் திருப்பணிகளை ஒருங்கிணைக்க குழு; இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள பழமையான கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்து குடமுழுக்கு நடத்த உத்தரவு; திருக்கோவில் பணிகள் மேற்கொள்ள மண்டல மாநில அளவிலான வல்லுநர் குழு; தற்போது வரை 3,986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக வல்லுநர் குழுவால் அனுமதி; ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான வரலாற்று சிறப்புமிக்க நூற்றுப் பன்னிரண்டு திருக்கோவில்களை பழமை மாறாமல் சீர் செய்ய 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு என இந்த நிதியாண்டில் மட்டும் 5,078 திருக்கோவில்களின் திருப்பணிகள் மூலம் இந்து சமய அறநிலையத்துறையைக் காத்து வரும் ஆட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி. இதனை மக்கள் அறிவார்கள். அறிவது மட்டுமல்ல வாழ்த்திக்கொண்டும் இருக்கிறார்கள்.

 

நீதிபதிகளே அறநிலையத்துறைக்கு நாம் ஆற்றும் பணிகளைப் பார்த்து வியந்து பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் மொழி, தமிழர்கள், தமிழ்நாடு என்ற மாநிலம் காப்பாற்றப்பட வேண்டும். வீர முத்துவேல் போன்ற அறிவியலாளர்களை எடுத்துக்காட்டாக கொள்ள வேண்டும். அனைவரும் தமிழ்த்தாயின் பிள்ளைகள் என்ற நோக்கத்தோடு செயல்படுவதற்கான உணர்வை தர வேண்டும். மாணவர்களின் பசியாற்றும் காலை உணவுத் திட்டம் தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட இருக்கிறது. அப்படி விரிவாக்கம் செய்யப்படக்கூடிய திட்டத்தை கலைஞர் படித்த திருக்குவளை பள்ளியில் இருந்து நான் தொடங்கி வைத்திருக்கிறேன். 'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்' என்ற வள்ளலாரின் ஏக்கத்தைப் போக்கும் வகையிலான மக்களுக்கான திட்டம் தான் காலை உணவுத் திட்டம். அனைத்து நன்மைகளும் அனைவருக்கும் கிடைக்கக் கூடாது என்ற ஒரு கூட்டம் தான் எங்களுக்கு எதிரான பரப்புரையில் ஈடுபடுகிறது. அதைப் பற்றி எனக்கு கவலை இல்லை. தர்மபுர ஆதீனம் போன்ற நல்லிணக்கத்தை விரும்பும் சகோதரத்துவத்தை விரும்பும் குருமகா சன்னிதானங்கள் எங்களை ஆதரிக்கிறார்கள் என்பதே எங்களுக்குப் போதுமானது'' என்றார்.

 

 

Next Story

கலைஞர் நூற்றாண்டு பேச்சுப் போட்டி; பரிசுகளை வழங்கிய முதல்வர் 

Published on 23/08/2023 | Edited on 23/08/2023

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில் தமிழ்நாடு முதலமைச்சரின் ‘தலை நிமிரும் தமிழகம்’ என்ற தமிழகத்தின் விடியலுக்கான முழக்கத்தைக் கல்லூரி மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாகத் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம், தமிழகத்திலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்காகத் தமிழிலும், ஆங்கிலத்திலும் பேச்சுப் போட்டிகளை நடத்தியது. கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் பாடத்திட்டங்களுக்கு அப்பால், மாணவர்கள் அறிந்தும், உணர்ந்தும், தெளிய வேண்டிய உன்னத விழுமியங்களை மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவும், தமிழ்ச் சமூகத்தின் தனித்துவமான பண்பாடுகளை, பெருமைகளை, இலக்கியங்களை, கலைகளை, வரலாற்றை மாணவர்கள் அறிந்துகொள்ளும் விதமாகவும், தமிழகத்தின் 38 மாவட்டங்களில் நடத்தப்பட்ட இப்பேச்சுப் போட்டிகளில் 4,000 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

 

ஒவ்வொரு மாவட்டத்திலும், தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.20,000, ரூ.10,000 மற்றும் ரூ.5,000 ஆகிய பரிசுகளும், மாநில அளவில் தமிழிலும், ஆங்கிலத்திலும் தனித்தனியாகப் பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் மூன்று இடங்களைப் பெறும் மாணவ, மாணவியருக்கு தலா ரூ.1,00,000, ரூ,50,000 மற்றும் ரூ.25,000 ஆகிய பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. மாவட்ட அளவில் 228 மாணவ, மாணவியர்களும், மாநில அளவில் 6 மாணவ, மாணவியர்களும் இப்பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்று பரிசுகளைப் பெற்றனர்.

 

Artist Centennial Speech Contest Chief Minister who presented the prizes

 

சென்னை கோயம்பேட்டில் உள்ள தூய தாமஸ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்ற கலைஞரின் நூற்றாண்டு விழா மற்றும் அனைத்துக் கல்லூரி மாணவ மாணவியருக்கான பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழாவில், மாநில அளவில் வெற்றி பெற்ற 6 மாணவ, மாணவியருக்குப் பரிசுத் தொகைக்கான காசோலைகள், பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் க. பொன்முடி, மா. சுப்பிரமணியன், செஞ்சி மஸ்தான், சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் சா. பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு பாடநூல் கழகத்தின் தலைவர்  திண்டுக்கல் லியோனி என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.