Published on 27/07/2021 | Edited on 27/07/2021
தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்கள் மற்றும் நகர்ப்புறங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் இதுவரை நடத்தப்படாமல் இருக்கிறது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், விடுபட்ட மாவட்டங்களில் வரும் அக்டோபர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது தொடர்பாக அவசர ஆலோசனைக் கூட்டம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (27.07.2021) மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.