Published on 05/06/2020 | Edited on 05/06/2020
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறைகளில் ஆவணங்களை எடுக்க விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவணங்களை எடுக்க heritagegroup2017@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் வழக்கறிஞர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் வாரம்தோறும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 11.00 மணிமுதல் 12.00 மணிவரையும், மதியம் 02.00 மணிமுதல் 03.00 மணிவரை மட்டுமே ஆவணங்களை எடுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற வளாகத்தில் ஒன்று கூடுதல், கூட்டம் சேர்த்தலைத் தவிர்த்து முகக்கவசம், கையுறை பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.