Skip to main content

பாலியல் வல்லுறவு.. வழக்கறிஞர் மீது வழக்கறிஞர் புகார்!

Published on 16/02/2019 | Edited on 16/02/2019

 

     "திருமணம் செய்வதாகக் கூறி மயக்கநிலையில் இருந்த என்னைக் கற்பழித்து பாலியல் வல்லுறவு செய்து, கொலை மிரட்டல் விடும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை வேண்டும்" என நெல்லை காவல்துறை மாநகர ஆணையரிடம் புகாரளித்துள்ளார் இ.பி.காலணியை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சீதாலட்சுமி.

 

l

 

   " எட்டு ஆண்டுகளாக திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் நான் 2016ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் நிர்வாககுழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தேன். அக்காலக்கட்டத்தில் அதே சங்கத்தின் செயலாளராக இருந்தவர் தற்பொழுது மாவட்ட 1வது நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பணியாற்றி வரும் ராஜேஷ்வரன். ஒரே சங்கம் என்பதால் அவருடன் நண்பராக நெருங்கிப் பழகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் அவர் குடியிருந்து வரும் மகாராஜா நகர்  எம்.கே.எம்.அபார்ட்மெண்டிற்கு அடிக்கடி செல்லும் சூழல் ஏற்பட்டது. 

 


2017ம் ஆண்டு வழக்கறிஞர் சங்கத் தேர்தலின் பொழுது அவர் தலைவராகப் போட்டியிட்டு தோல்வியடைந்து, வெளியில் வராமல் வீட்டிலே இருந்து விட்டார். அந்த தருணத்தில் ஆறுதல் கூற சென்ற என்னிடம், " எனக்கு 40 வயது தான் ஆகின்றது. உன்னை திருமணம் செய்கிறேன்." என ஆசை வார்த்தைக் காட்டினார். பிறகு ஒரு நாள், "நம்முடைய திருமணத்தைப் பற்றி அம்மா பேச நினைக்கின்றார்" என என்னை அவருடைய வாகனமான TN72 AS 1216 சுவிப்ட் டிசையரில் யாருமில்லாத அவரது வீட்டிற்கு அழைத்து சென்று, குளிர்பானம் கொடுத்து மயக்க நிலையில் இருந்த என்னை பாலியல் வல்லுறவு செய்தார். அதனால் நான் கர்ப்பமடைந்தேன். இது தெரிந்த அவர் " கண்டிப்பாக திருமணம் செய்து கொள்கிறேன்." என என்னை ஏமாற்றி கோவில்பட்டி கமலா மாரியம்மாள் மருத்துவமனைக்கு அழைத்து சென்று கருவைக் கலைத்தார். அதன் பின் எப்பொழுதுக் கேட்டாலும் என்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் என்று கூறி வந்தவர்,  இப்பொழுது ஆட்களைக் கொண்டு மிரட்டி வருகின்றார். ஆகவே மயக்க நிலையிலிருந்த என்னை பாலியல் வல்லுறவு செய்து மிரட்டல் விடும் வழக்கறிஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என்கின்றது பாதிக்கப்பட்ட பெண் வழக்கறிஞர் சீதாலெட்சுமியின் புகார் மனு. இது வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் பரப்பரப்பை உருவாக்கியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி; காவலை நீட்டித்த நீதிமன்றம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Senthilbalaji who appeared in person; The court extended the custody

போக்குவரத்துத்துறையில் சட்ட விரோதமாகப் பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். இதனையொட்டி செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாவான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த பிப்ரவரி 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், செந்தில் பாலாஜி கடந்த முறை காணொளி மூலம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 33ஆவது முறையாக செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில், அமலாக்கத்துறையின் வழக்கின் அசல் ஆவணங்களை பெற்றுகொள்ள சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் இன்று (22.04.2024) செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார். இதற்காக புழல் சிறையில் இருந்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை 34 ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கு விசாரணையை ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக வழக்கு!

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
Case against Nayinar Nagendran!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் பாஜக தொழில்துறை மாநில துணைத்தலைவர் கோவர்தனின் உணவகத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.  இந்தச் சோதனையில் ரூ.1.10 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து, நெல்லையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு காவல்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க வேட்பாளர் நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதிக்குத் தேர்தல் நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவான வழக்கை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அதனால், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை நிராகரிக்க கோரிய தன் ஆட்சேபனை மீது முடிவெடுக்கும் வரை தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். மேலும், நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றது சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும்’ என்று கூறப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த மனு தொடர்பான விசாரணை, சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நாளை (16-04-24)  விசாணைக்கு வருகிறது.