Skip to main content

குவைத் கட்டட தீ விபத்து; முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
kuwait city fire incident CM MK Stalin obituary

குவைத் நாட்டில் மங்காப் என்ற பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பில் நேற்று (12.06.2024) அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மலையாள மக்கள் அதிகம் வசிக்கும் இடத்தில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் தமிழர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் ஏற்பட்ட மீட்புப் பணிகள் நடைபெற்றன. அதே சமயம் தீ விபத்தில் சிக்கி காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்தது மற்றும் பலர் காயமடைந்தது குறித்த ஆய்வுக் கூட்டம் டெல்லி உள்ள பிரதமர் மோடி இல்லத்தில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த கூட்டத்திற்குப் பிரதமர் மோடி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், வெளியுறவுத் துறை இணை அமைச்சர் கீர்த்திவர்தன் சிங், பிரதமரின் முதன்மைச் செயலர் பிரமோத் குமார் மிஸ்ரா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுச் செயலர் வினய்  குவாத்ரா மற்றும் மூத்த உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

kuwait city fire incident CM MK Stalin obituary

அப்போது இந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்திய அரசு அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி அறிவுறுத்தினார். வெளியுறவுத்துறை அதிகாரிகள் உடனடியாக குவைத்திற்கு சென்று நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், உயிரிழந்தவர்களின் உடல்களை விரைவாக இந்தியாவிற்கு அனுப்பவும் உதவ வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். உயிரிழந்த இந்தியர்களின் குடும்பங்களுக்குப் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணம் வழங்கப்படும் எனப் பிரதமர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில் நேற்று ஏற்பட்ட தீவிபத்தில் 40-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் உயிரிழந்திருப்பதாக வந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். உயிரிழந்தோர் அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். 

kuwait city fire incident CM MK Stalin obituary

இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழிலாளர்கள் யாரேனும் உள்ளனரா என்ற தகவலைச் சேகரிக்கும்படி அயலகத் தமிழர் நலன் மறுவாழ்வுத்துறை ஆணையரகத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்த அனைவரும் குவைத் நாட்டின் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்திய வெளியுறவு அமைச்சகம், குவைத் நாட்டிலுள்ள இந்தியத் தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறது. இவ்விபத்து தொடர்பான விவரங்களுக்கு அயலகத் தமிழர் நலத்துறையின் உதவி எண்களான +91 1800 309 3793 (இந்தியாவிற்குள்), வெளிநாடு எனில் +91 80 6900 9900, +91 80 6900 9901 என்ற இரு எண்களிலும் தொடர்பு கொள்ளவும்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

‘பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத் திட்டம்’ - அமைச்சர் உதயநிதி அறிவிப்பு!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'Entrepreneurship Curriculum in Schools' - Minister Udayanidhi Announcement

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று (27.06.2024) சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், “தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிக்காக ஒருங்கிணைந்த மையம் அமைக்கப்படும். நான் முதல்வன் திட்டம், தமிழ்நாடு மகளிர் வேலை வாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்ட நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். அரசின் முக்கிய திட்டங்களைக் கண்காணிக்க மாவட்ட அளவில் சிறப்புத் திட்ட செயலாக்கத் துறை கண்காணிப்பு அலகு ஏற்படுத்தப்படும். ஒரு புள்ளி இயல் அலுவலர் மற்றும் புள்ளி இயல் ஆய்வாளர் கொண்டு அந்தந்த மாவட்ட புள்ளி இயல் துணை இயக்குநர் கீழ் செயல்படும். 

'Entrepreneurship Curriculum in Schools' - Minister Udayanidhi Announcement

முதலமைச்சரின் கனவுத்திட்டமான நான் முதல்வன் திட்டத்தின் திறன் சார்ந்த படிப்புகள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, 45 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறும் வகையில் துணை மருத்துவ படிப்புகளுக்கு விரிவுபடுத்தப்படும். நான் முதல்வன் திட்டத்தின் மூலம் கிராமப்புறம் மற்றும் பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறந்த 1000 மாணவர்களுக்குத் திறன் பயிற்சி அளித்து உயர் வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த திறன் பயிற்சிகள் சிறந்த தொழில் முறை பயிற்றுநர்கள் மூலம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் முதற் கட்டமாக 8 மாவட்டங்களில் செயல்படுத்தப்படும். அதில் மகளிருக்குப் பயனளிக்கும் அனைத்து தகவல்களைத் தரும் மகளிர் தகவல் வங்கி உருவாக்கப்படும். அரசு பள்ளிகளில் 8 முதல் 12 வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு உளவியல் பரிசோதனை மூலம் திறமைகளைக் கண்டறிய திறமை மதிப்பீட்டு தளம் உருவாக்கப்படும். பள்ளிகளில் தொழில் முனைவு குறித்த பாடத் திட்டம், அரசு கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் மாணவிகளுக்கு தொழில் துறை சார்ந்த பணியிட பயிற்சி அளிக்கப்படும்” எனத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 

Next Story

‘பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மையம் அமைக்கப்படும்’ - அமைச்சர் உதயநிதி!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
'Traditional martial arts training center will be set up' - Minister Udayanidhi

சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள சட்டமன்றப் பேரவை மண்டபத்தில் தமிழக சட்டசபை பேரவைக் கூட்டம் கடந்த 20 ஆம் தேதி (20.06.2024) தொடங்கியது. அப்போது மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சட்டப்பேரவை கூட்டத் தொடரின் இரண்டாம் நாளில் (21.06.2024) இருந்து பல்வேறு துறைகளின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இன்று (27.06.2024) இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றது. அப்போது அத்துறையின் அமைச்சரான உதயநிதி ஸ்டாலின் 2024 - 2025 ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு பல்வேறு அறிவுப்புகளை வெளியிட்டார். அதில், “சென்னை ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கில் உள்ள மாணவர் விடுதி ரூ. 25 கோடி மதிப்பீட்டில் உயர் செயல்திறன் விடுதியாக மேம்படுத்தப்படும். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பாகப் பங்கேற்று வெற்றிபெற்றவர்களுக்கு அரசுப் பணி வழங்கப்டும். அதாவது 100 வீரர் வீராங்கனைகளுக்கு 3% விளையாட்டுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணி ஆணை வழங்கப்படும். 

'Traditional martial arts training center will be set up' - Minister Udayanidhi

ரூ.100 கோடியில் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் 33 விளையாட்டு உபகரணங்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும். இந்தியாவிலே முதல் முறையாக தமிழ்நாடு உடற் கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம் நிறுவப்படும். ரூ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய நிர்வாகத்தின்கீழ் உள்ள மாவட்ட விளையாட்டு வளாகங்களும் விளையாட்டு அரங்கங்களும் சீரமைக்கப்படும்.

ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 சட்டமன்றத் தொகுதிகளில் சிறு விளையாட்டரங்கங்கள் அமைக்கப்படும். மதுரை மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஒலிம்பிக் அகாடமியில் ஒலிம்பிக் தரத்திலான நீச்சல் குளம் அமைக்கபடும். தென் தமிழ்நாட்டைச் சார்ந்த நீச்சல் வீரர் - வீராங்கனைகள், சர்வதேச அளவிலான நீச்சல் போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் நோக்கத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கரூர் மாவட்ட விளையாட்டு வளாகத்தில் புதிய நீச்சல் குளம் அமைக்கப்படும். ரூ.10 கோடியில் மதிப்பீட்டில் மாணவர்கள், மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அனைத்து மாவட்ட விளையாட்டு வளாகங்களிலும் உள்ள உடற்பயிற்சிக் கூடங்கள் குளிர்சாதன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். 

'Traditional martial arts training center will be set up' - Minister Udayanidhi

மாவட்ட விளையாட்டு வளாகத்தில் தற்போதுள்ள ஹாக்கி ஆடுகளம் செயற்கை இழை ஆடுகளமாகத் தரம் உயர்த்தப்படும். தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் மாணவர்கள் பங்கேற்பதை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கையாக இது அமையும். கன்னியாகுமரி மாவட்டத்தில், தமிழர் பாரம்பரியத் தற்காப்புக் கலைப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். அதன்படி களரி, அடிமுறை, சிலம்பம், சுவடுமுறை, மல்யுத்தம், குத்துவரிசை, அடிதடை, வர்மம் போன்ற தென் தமிழ்நாட்டின் பாரம்பரியத் தற்காப்புக் கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசேர்க்கும் சீரிய முயற்சி ஆகும்” எனத் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.